சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ -saarayathai naadi kudipavane

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ -saarayathai naadi kudipavane

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !
தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ !
நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ !
கப்பர் நகூமே !
பெத்சாயிதாவே !
கோரோசீனே !
ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ !

2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ !
தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !
மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ !
பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ !

3 . அநியாய தீர்ப்புச் சொல்லும் அற்பனுக்கு ஐயோ !
அநீதியாய் வீட்டைக்கட்டும் திருடனுக்கு ஐயோ !
ஆண்டவரை மறந்து விட்டு அலைபவனே ஐயோ !
அவரோடு வழக்காடும் மண்ணோட்டுக்கு ஜயோ !

4 . ஏழையை ஒடுக்குகின்ற எத்தனுக்கு ஐயோ !
பார்வோனை நம்புகின்ற பாதகர்க்கு ஐயோ !
கல்லையும் மண்னையும் வணங்கும் கண்மூடிக்கு ஐயோ !
சிறியோர் இடற காரணமாய் இருப்பவனே ஐயோ !

5 . குருடனுக்கு வழி காட்டும் குருடனுக்கு ஐயோ !
நீண்ட ஜெபம் செய்யும் நிர்விசாரிகளே , ஐயோ !
பரலோகத்தை பூட்டுகின்ற போதகரே , ஐயோ !
சுவிசேஷத்தை சொல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் ஐயோ !

Bible verse:

சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
ஏசாயா 5:11

கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
லூக்கா 10:13

9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
1 கொரிந்தியர் 6:9

10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 கொரிந்தியர் 6:10

16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18-16

13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.

மத்தேயு 23-13

1 பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

லூக்கா 17-1

11 துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும், அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

ஏசாயா 3-11

23 பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!

ஏசாயா 5-23

7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

மத்தேயு 18-7

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo