Aadhi Thiru Vaarthai Tamil Christmas song lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
பல்லவி
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட
அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட — ஆதி
சரணங்கள்
1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். — ஆதி
2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் — ஆதி
3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் — ஆதி
Aadhi Thiru Vaarthai song lyrics, Tamil Christmas song lyrics, ஆதித் திருவார்த்தை திவ்விய song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Aadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை திவ்விய’.
- The song contains a beautiful message celebrating the birth of a divine child.
- It includes a refrain praising the significance of unconditional love and grace.
- Additional songs related to the theme can be found linked within the article.
- Readers can explore more Tamil Christian songs and their lyrics through provided links.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
And God blessed the seventh day, and sanctified it: because that in it he had rested from all his work which God created and made.
ஆதியாகமம் | Genesis: 2: 3




