லூக்கா – 22

Deal Score0
Deal Score0

லூக்கா – 22
1. எது சமீபமாயிற்று? பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை.
2. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? இயே சுவைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3. அப்பொழுது யாருக்குள் சாத்தான் புகுந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள்.
4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், என்ன செய்தான்? இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் வகையைக்குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
5. அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. அதற்கு அவன் சம்மதித்து, எப்பொழுது அவரை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும்படி சமயந்தேடினான்? ஜனக்கூட்டமில்லாத வேளையில்.
7. என்ன நாள் வந்தது? பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.
8. அப்பொழுது இயேசு யாரை அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்? பேதுருவையும் யோவானையும்.
9. அதற்கு அவர்கள் என்ன கேட்டார்கள்? நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண் ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, யார் உங்களுக்கு எதிர் படுவான்? தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்ப டுவான். நீங்கள் அவனுக்குப் பின்சென்று, என்ன செய்யுங்கள்? அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போங்கள்.
11. அந்த வீட்டெஜமானை நோக்கி என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. அவன் எதைக் காண்பிப்பான்? கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே என்ன செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்? ஆயத்தம்பண்ணுங்கள்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, எதை ஆயத் தம்பண்ணினார்கள்? பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூட யாரெல்லாம் பந்தியிருந்தார் கள்? பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் எப்போது உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்? பாடுபடுகிறதற்கு முன்னே.
16. எதிலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்? தேவனுடைய ராஜ்யத்திலே.
17. அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி சொன்னது என்ன? நீங்கள் இதைவாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண் ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்க ளுக்குக் கொடுத்து சொன்னது என்ன? இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங் கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து சொன்னது என்ன? இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
21. பின்பு: இதோ, யாருடை கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது?என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை.
22. எப்படி மனுஷகுமாரன் போகிறார்? தீர்மானிக்கப்பட்டபடியே. ஆனாலும் யாருக்கு ஐயோ என்றார்? அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு.
23. அப்பொழுது அவர்கள் என்ன என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கி னார்கள்? நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று.
24. அன்றியும் என்ன என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று? தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று.
25. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஆளுகிறார்கள். அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்க ளும் யார் என்னப்படுகிறார்கள்? உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26. யாருக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது? உங்களுக்குள்ளே. உங்களில் பெரி யவன் யாரைப்போல இருக்கக்கடவன்? சிறியவனைப்போல. தலைவன் யாரைப்போல இருக்கக்கடவன்? பணிவிடைக்காரனைப்போல.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன். அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே யாரைப்போல் இருக்கிறேன்? பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
28. மேலும் எதில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே? எனக்கு நேரிட்ட சோதனைகளில்.
29. ஆகையால், என் பிதா எனக்கு எதை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்க ளுக்கு ஏற்படுத்துகிறேன்? ஒரு ராஜ்யத்தை.
30. நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, எப்படி இருப்பீர்கள் என்றார்? இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியா யந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, எதைப்போல சாத்தான் உங்க ளைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்? கோதுமையைச் சுளகி னால் புடைக்கிறதுபோல.
32. நானோ எது ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்? உன் விசுவாசம். நீ குணப்பட்டபின்பு யாரை ஸ்திரப்படுத்து என்றார்? உன் சகோத ரரை.
33. அதற்கு அவன்: ஆண்டவரே, எதிலே உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயி ருக்கிறேன் என்றான்? காவலிலும் சாவிலும்.
34. அவர் அவனை நோக்கி: பேதுருவே, எதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக் கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே.
35. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களை எவைகள் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார்? பணப் பையும் சாமான்பையும் பாதரட்சைகளும். அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36. அதற்கு அவர்: இப்பொழுதோ எவைகளை உடையவன் அவைகளை எடுத் துக்கொள்ளக்கடவன்? பணப்பையும் சாமான்பையும். எது இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்? பட்டயம் இல்லாதவன்.
37. என்ன என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டி யதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அக்கிரமக்காரரில் ஒருவனாக எண் ணப்பட்டார். என்ன காலம் வந்திருக்கிறது என்றார்? என்னைப்பற்றிய காரியங் கள் முடிவுபெறுங்காலம்.
38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே எத்தனை பட்டயம் இருக்கி றது என்றார்கள்? இரண்டு பட்டயம். அவர் என்ன என்றார்? போதும் என்றார்.
39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே என்ன செய்தார்? ஒலிவமலைக் குப் போனார். அவருடைய சீஷர் என்ன செய்தார்கள்? அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எதற்கு உட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொன்னார்? சோதனைக்குட்படாத படிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
41. அவர்களை விட்டு எங்கேபோய் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்? கல்லெறி தூரம் அப்புறம்போய்.
42. என்ன என்று ஜெபம் செய்தார்? பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத் திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்ப டியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று  ஜெபம்பண்ணி னார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, என்ன செய்தான்? அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, என்ன செய்தார்? அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். எது இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந் தது? அவருடைய வேர்வை.
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, என்ன கண்டார்? அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்.
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? எதற்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்? சோதனைக்குட்படாதபடிக்கு,.

47. அவர் அப்படிப் பேசுகையில் என்ன நடந்தது? ஜனங்கள் கூட்டமாய் வந்தார் கள். அவர்களுக்கு முன்னே யாரும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும்

48. இயேசு அவனை நோக்கி: யூதாசே எதினாலே மனுஷகுமாரனைக்  காட்டிக் கொடுக்கிறாய் என்றார்? முத்தத்தினாலேயா.
49. அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு சொன்னது என்ன? ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50. அந்தப்படியே அவர்களில் ஒருவன் என்ன செய்தான்? பிரதான ஆசாரியனு டைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
51. அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, என்ன செய் தார்? அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
52. பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி சொன் னது என்ன? ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்ட யங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
53. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங் கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடையவேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
54. அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, என்ன செய்தார்கள்? பிரதான ஆசாரியனு டைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். யாரும் தூரத்திலே பின்சென் றான்? பேதுருவும்.
55. அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்த போது, யாரும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்? பேதுருவும்.
56. அப்பொழுது யார் அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்? ஒரு வேலைக்காரி.
57. அதற்கு அவன் சொன்னது என்ன? ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
58. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு என்ன சொன் னான்?  நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நான் அல்ல என்றான்.
59. ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப்பார்த்து என்ன என்று சொன்னான்? மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
60. அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நீ சொல்லுகிறதை அறி யேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே என்ன ஆயிற்று? சேவல் கூவிற்று.
61. அப்பொழுது கர்த்தர் என்ன செய்தார்? திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த் தார். உடனே பேதுரு எதை நினைவுகூர்ந்தான்? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைவுகூர்ந்தான்.
62. பேதுரு நினைவுகூர்ந்து என்ன செய்தான்? வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63. இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் என்ன செய்தார்? அவரைப் பரியா சம்பண்ணி, அடித்து,
64. அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்ட துமன்றி,
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன் னார்கள்.
66. விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் கூடிவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
67. அவர்கள் என்ன கேட்டார்கள்? நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்கள்? நான் உங்களுக்குச் சொன்னா லும் நம்பமாட்டீர்கள்.
68. நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர் கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69. இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரி சத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70. அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ யார் என்று கேட்டார்கள்? நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்? நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71. அப்பொழுது அவர்கள் சொன்னது என்ன? இனி வேறு சாட்சி நமக்கு வேண்டு வதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo