என்னை அழைத்தவர் நீர் – Ennai Alaithavar Neer
என்னை அழைத்தவர் நீர் – Ennai Alaithavar Neer
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா
என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா