கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய – kiristhuva Jeeviyam Sowbhakiya
கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய – kiristhuva Jeeviyam Sowbhakiya
1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம்
கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ
2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ
உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்
ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ
என்னே இப்பாரங்கள் என்னே இக்கிலேசங்கள்
கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ
5. எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே
- AYE KHUDA – ए खुदा Lyrics
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal