சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan Tamil Christian Old Traditional Song lyrics
பல்லவி
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்
அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி
1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பவத்துயர்
போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்
துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்
2.விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்
கொண்டாடிட அவர் பதம்
தேடிட வெகு திரள் கூடிடத்
துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்
3.சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழ தீயோன்
பயந்து தாழ மிக
நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
சுந்தரப் பரம தேவமைந்தன் lyrics, Sundara Parama Deva Maidhan lyrics
Sundara Parama Deva Maidhan song lyrics in English
Sundara Parama Deva Maidhan Yeaga Kiristhuvukku
Thoththiram Pugalchi Niththiya Keerththam Entrum
Antharam Puviyum Thanthu Sontha Jeevanaiyum Eenthu
Aattrinaar Namai Ontraai Koottinaar Arul Mudi
Soottinaar Kirubaiyaal Theattrinaarae Thuthi
1.Paathaka Pasaasal Vantha Theetheanum Pavaththaal Nontha
Paavikaalana Namai Usaavi Meettarae
Vedha Pithavukku Ugantha Jaathiyaa Kootta Vantha
Measiyaavai Pattrum Visu Vaasa Veettaarae
Kothanukaa Neethiparan Paathamathin Aatharavil
Koodungal Pavaththuyar
Podungal Jeyaththai Kondadungal
Thuthi Solli Paadungal Paadungal Entrum
2.Vinnilulla Jothikalum Ennadangaa Sothanikalum
Vinthaiyaai Kiristhuvai paninthu Pottravae
Mannilulla Jaathikalum Nannum Pala Porulkalum
Vallaparan Ena Thuthi Solli Yeaththavae
Annalaam Pithaavukoru Punniya Kumaarai
Kondaadida Avar Patham
Theadida Vegu Thiral Koodida
Thuthi Pugal Paadida Paadida Entrum
3.Saththiya Tharasarkalum Viththaka Peariyaarkalum
Sangaththoar Kalum Kirubai Thangi Vaalavae
Eththisai Manitharkalum Bakthar Visuvaasikalum
Yeaga Migum Samaathan Maaga Vaazhavae
Uththama Pothakarkalum Sathya Thiru Sabaikalum
Uyarnthu Vaazha Theeyon
Bayanthu Thaazha Miga Nayanthu
Kiristhuvukku Jeyanthaan Nayanthaan Entrum
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
The name of the first is Pison: that is it which compasseth the whole land of Havilah, where there is gold;
ஆதியாகமம் | Genesis: 2: 11
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan.’
- The song includes a structure of a pallavi and several anupallavi sections, reflecting themes of praise and devotion.
- It highlights the significance of Jesus Christ in various verses, emphasizing redemption and unity among believers.
- The lyrics showcase traditional elements and the style of Tamil Christian music, making it a cultural piece.
- English translations of the song lyrics are also provided for broader understanding.
Estimated reading time: 3 minutes




