எபேசியர்-6: 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப் பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
2தீமோத்தேயு-2: 5 மேலும் ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
கிறிஸ்தவ வாழ்க்கை வெல்லுகிற வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஜெயம்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு நான் கொண்டுவருகிற பலன் கொடுக்கப்படும் என்பதை இயேசுவே வாக்குப்பண்ணுவதை நாம் அறிந்திருக்கிறோம்.
நாம் வெல்ல வேண்டிய அல்லது ஜெயிக்க வேண்டிய காரியமானது இரண்டு விதமான கோணங்களில் உள்ளது என்று பார்க்கிறோம். ஒன்று போராட்டம், மற்றொன்று போட்டி. இந்த நாளிலே போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிய பகுதியைக் குறித்து அறிந்துகொள்ளக் கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக!
நம்முடைய யுத்தம் அல்லது போராட்டமானது
- மாம்சத்திற்குரியது அல்ல,
- மனிதர்களோடும் அல்ல.
நாம் ஆவிக்குரியவர்களாக இருக்கிறபடியால், நம்முடைய யுத்தம் ஆவிக்குரியதாக இருக்கிறதுது. அதாவது, மாம்ச பெலத்தை வைத்தோ அல்லது மாம்சத்திற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நாம் யுத்தம் செய்பவர்கள் அல்ல.
2கொரிந்தியர்-10: 3,4 நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
நாம் யாரோடு யுத்தம் செய்கிறோம் அல்லது நம்மோடு யுத்தத்திற்கு வருகிறவன் யார்?
சாத்தான் தான் நம்முடைய ‘எதிராளி’ என்று அழைக்கப்படுகிறான். அப்படியென்றால், எதிரிகள்தான் எப்பொழுதும் நம்மோடு சண்டைக்கு அதாவது யுத்தத்திற்கு வருவார்கள், அல்லது சண்டைக்கு இழுப்பார்கள். நண்பர்கள் ஒருபோதும் நம்முடன் சண்டைக்கு வருகிறவர்களாக இருக்கமாட்டார்கள். வேற வார்த்தையில்சொன்னால் ஒருவர் சண்டைபோட்டாலே அவர் நமக்கு எதிரியாகக் காணப்படுவார். ஆவிக்குரிய ரீதியாக நமக்கு எந்த மனிதர்களும் எதிரிகளாக இருக்கக் கூடாது, கூடுமானால் யாவருடனும் சமாதானமாயிருங்கள் என்று பவுல் சபையாருக்குக் கூறுவது எதைக் குறிக்கிறது? மனிதர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கக்கூடாது என்பதைத் தானே!
1பேதுரு-5: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்ளூ ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
சாத்தான் நமக்கு எதிராக யுத்தம் செய்யும் விதம்:
யோவான்-10: 10ல் அவன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான். சமாதானம் என்பது சாத்தானுக்குள் ஒரு துளிஅளவும் பார்க்கப்பட முடியாத தன்மையாகும். எப்படி பரிசுத்தமானது அவனுக்குள் பார்க்கப்பட முடியாத தன்மையோ, அதைப்போலத் தான். சாத்தான் நம்மோடு யுத்தம்செய்கிற காரியத்தை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கு சில உதாரணங்களைக் கொடுக்க விரும்புகிறேன்.
வஞ்சித்தல்:
ரோமர்-12: 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
வெளி-12: 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்
திசைதிருப்புதல்:
தேவன் காட்டும் வழியில் நடக்கவிடாமல் நம்மை உலகத்தின் தன்மைளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து அவைகளால் நம்மைக் கறைபடுத்திட சாத்தான் தீவிரமாகச் செயல்படுகிறான். உலகத்தின் ஆசைகள், இச்சைகள், தேவையில்லாத எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நோக்கங்களை நமக்குள் எழுப்பிவிடுதல் சாத்தானுடைய ஒருவித யுத்த வியூகம் ஆகும்.
சோதனைகள்:
பாவத்திற்குள் விழவைப்பதற்கு ஏதுவான, தேவனைவிட்டுப் பிரிப்பதற்குரிய, மாம்சத்தை எழும்பச்செய்கிற, சுயத்தை முக்கியப்படுத்த வைக்கிற சோதனைகளை சமயத்திற்கு ஏற்ப நமக்குள் கொண்டுவருவான்.
இயேசுவுக்கு வந்த சோதனைகள் (லூக்கா-4: 2) இயேசு நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்.
யோசேப்பிற்கு வந்த சோதனை (ஆதி-39: 9) இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை, நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
நமக்கு விரோதமான போராட்டத்தில் சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்கள்:
பயம்
கலக்கம்
மனப்போராட்டம்
தடுமாற்றம்
குழப்பம்
சந்தேகம்
இருமனம்
தீய எண்ணங்கள் (இச்சை, பெருமை, பேராசை போன்றவைகள்)
இவைகள் இயற்கையான செய்கைகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவைகள் சாத்தானால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என நாம் அறிந்துகொண்டால் நாம் விழிப்படைந்து யுத்தத்திற்கு ஆயத்தமாகிட, யுத்தத்தில் ஜெயித்திட அது உதவி செய்யும்.
சாத்தானுக்கு விரோதமாக யுத்தத்தில் நாம் பயன்டுத்த வேண்டிய ஆயுதங்கள்:
- சத்தியம் (எபேசியர்-6: 14, 17 சத்தியம் என்னும் கச்சையை, தேவவசனமாகிய ஆவியின்
- தீர்மானமுள்ள வாழ்வு (யோபு-31: 1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?)
- உறுதியான விசுவாசம்
- தேவனுக்குக் கீழ்படிதல் (யாக்-4: 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
- ஜெபமும் உபவாசமும் (மத்தேயு-17: 21 இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
- யுத்தத்தைக் குறித்த அறிவும், அதை எதிர்கொள்ளும் தைரியமும்: ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றிபெற்று தேவாதி தேவன் நமக்குக் கொடுக்கவிருக்கும் கிரீடத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக நாம் வாழ்வோமாக. யுத்தத்தில் வெற்றிபெறுபவர்களுக்காக ஜீவகிரீடம், நீதியின் கிரீடம், வாடாத மகிமையின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கின்றன.
![Revelation Song (2022 Version) Revelation Song (2022 Version)](https://is3-ssl.mzstatic.com/image/thumb/Music122/v4/94/42/de/9442deec-9040-12c6-1a43-baefb83f8b2b/824.jpg/600x600bb.jpg)