யோவான் – 2

யோவான் – 2
1. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே என்ன நடந்தது? ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாய் எங்கேயிருந்தாள்? கலியாணவீட்டிலே.
2. இயேசுவும் அவருடைய சீஷரும் எதுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்? அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் யாரை நோக்கி, அவர்க ளுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்? இயேசுவை நோக்கி.
4. இயேசு யாரிடம் ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என்வேளை இன்னும் வரவில்லை என்றார்? தன் தாயிடம்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கிச் சொன்னது என்ன? அவர் உங்க ளுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
6. அங்கே எப்படிப்பட்ட கற்சாடிகள் வைத்திருந்தது? யூதர்கள் தங்களைச் சுத்திக ரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
7. இயேசு வேலைக்காரரை நோக்கி எதிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்? ஜாடி களிலே. அவர்கள் அவைகளை என்ன செய்தார்கள்? தண்ணீரால் நிறைய நிரப் பினார்கள்.
8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, யாரிடத்தில் கொண்டு போங்கள் என்றார்? பந்திவிசாரிப்புக்காரனிடத்தில். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோனார்கள்.
9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று யாருக்குத் தெரியும்? தண் ணீரை மொண்ட வேலைக்காரருக்கு. யாருக்குத் தெரியாது? பந்திவிசாரிப்புக் காரனுக்கு. அந்தத் திராட்சரசம் தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட் சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, யாரை அழைத்தான்? மணவா ளனை அழைத்தான். 
10. மணவாளனை அழைத்துச் என்ன சொன்னான்? எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை  இதுவரைக்கும் வைத்திருந் தீரே என்றான்.
11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, எதை வெளிப்படுத்தினார்? தம்முடைய மகிமையை. யார் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய சீஷர்கள்.
12. அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவ ருடைய சீஷரும் எங்கேபோய், அங்கே சில நாள் தங்கினார்கள்? கப்பர்நகூமுக் குப்போய்.
13. பின்பு எது சமீபமாயிருந்தது? யூதருடைய பஸ்காபண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
14. தேவாலயத்திலே யாரைக் கண்டார்? ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டார்.
15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, என்ன செய்தார்? அவர்கள் யாவ ரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
16. புறாவிற்கிறவர்களை நோக்கி என்ன சொன்னார்? இவைகளை இவ்விடத்தி லிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக் காதிருங்கள் என்றார்.
17. அப்பொழுது என்ன என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினை வுகூர்ந்தார்கள்? உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான  பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது.
18. அப்பொழுது யூதர்கள் யாரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு  என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்? இயேசுவை நோக்கி.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், எத்தனை நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்? மூன்று நாளைக்குள்ளே.
20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட எத்தனை வருஷம் சென் றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்? நாற்பத்தாறு வருஷம்.
21. அவரோ எதைக்குறித்துப் பேசினார்? தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை எப்போது அவருடைய சீஷர்கள் நினைவு கூர்ந்து,  வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித் தார்கள்? அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு.
23. பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, எதில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய நாமத்தில்.
24. அப்படியிருந்தும், இயேசு எதனால் அவர்களை நம்பி இணங்கவில்லை? எல்லாரையும் அறிந்திருந்தபடியால்.

25. எதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக் குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை? மனுஷருள்ளத்திலிருப் பதை அவர் அறிந்தபடியால்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo