யோவான் – 7

யோவான் – 7
1. இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவை என்ன செய்ய வகைதேடினார் கள்? கொலைசெய்ய வகைதேடினார்கள். ஏன் இயேசு யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார்? யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடினபடியால்.
2. எது சமீபமாயிருந்தது? யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 
3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: எதற்காக நீர் இவ்விடம் விட்டு யூதேயாவுக்குப் போம் என்றார்கள்? நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
4. யார் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்? பிரபலமாயிருக்க விரும்புகிறவன். நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் யாருக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்? உலகத்துக்கு.

5. அவருடைய சகோதரரும் ஏன் இப்படிச் சொன்னார்கள்? அவரை விசுவாசி யாதபடியால்.

6. இயேசு அவர்களை நோக்கி: யார் வேளை இன்னும் வரவில்லை? என்வேளை. யார் வேளை எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது? உங்கள் வேளை.
7. எது உங்களைப் பகைக்கமாட்டாது? உலகம். உலகம் ஏன் என்னைப் பகைக் கிறது? அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சி கொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
8. நீங்கள் இந்தப் பண்டிகைக்கு என்ன செய்யுங்கள்? போங்கள். நான் ஏன் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்? என் வேளை இன்னும் வராதபடியால்.
9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னும் எங்கே தங்கினார்? கலிலே யாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் எப்படிப் போகாமல் எப்படி பண்டிகைக்குப் போனார்? வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் என்ன செய்தார்கள்? அவரைத் தேடி: அவர்  எங்கே யிருக்கிறார் என்றார்கள்.
12. ஜனங்களுக்குள்ளே அவரைக் குறித்து என்ன உண்டாயிற்று? முறுமுறுப் புண்டாயிற்று. சிலர் என்ன சொன்னார்கள்? அவர் நல்லவர் என்றார்கள். வேறு சிலர் என்ன சொன்னார்கள்? அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
13. ஆனாலும் ஏன் ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை? யூதருக்குப் பயந்திருந்ததினாலே.
14. எப்போது இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம் பண்ணினார்? பாதிப் பண்டிகையானபோது.
15. அப்பொழுது யூதர்கள்: என்னவென்று ஆச்சரியப்பட்டார்கள்? இவர்  கல்லாத வராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப் பட்டார்கள்.
16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயி ராமல், யாருடையதாயிருக்கிறது? என்னை அனுப்பினவருடையதாயிருக்கி றது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் என்னவென்று அறிந்து கொள்ளுவான்? அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
18. சுயமாய்ப் பேசுகிறவன் எதைத் தேடுகிறான்? தன் சுயமகிமையைத் தேடுகி றான். யார் உண்மையுள்ளவனாயிருக்கிறான்? தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான். யாரிடத்தில் அநீதியில்லை? தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிற உண்மை யுள்ளவனிடத்தில்.
19. மோசே எதை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? நியாயப்பிரமாணத்தை. அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் எதின்படி நடக்கிறதில்லை? அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னை என்ன செய்யத் தேடுகிறீர்கள் என்றார்? கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
20. ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீ பிசாசுபிடித்த வன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: எதைச் செய்தேன் என்றார்? ஒரே கிரியையைச் செய்தேன். அதைக்குறித்து எல்லாரும் என்ன செய்கிறீர்கள்? ஆச்சரியப்படு கிறீர்கள்.
22. விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், யாரால் உண்டாயிற்று? பிதாக்களால் உண்டாயிற்று. பின்பு மோசே அதை உங்களுக்கு என்ன செய் தான்?  நியமித்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை என்ன செய்கிறீர்கள்? விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
23. மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் என்ன செய்வதி னாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே.
24. எதின்படி தீர்ப்புசெய்யாமல், எதின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்? தோற் றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
25. அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர் என்ன சொன்னார்கள்? இவனை யல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
26. இதோ, இவன் எப்படிப் பேசுகிறானே? தாராளமாய்ப் பேசுகிறானே. ஒருவ ரும் இவனுக்கு என்ன சொல்லுகிறதில்லையே? ஒன்றும் சொல்லுகிறதில் லையே. மெய்யாய் இவன் யார்தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்தி ருக்கிறார்களோ? கிறிஸ்துதான்.
27. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, என்னவென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார் கள்? அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று.
28. அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் யாரை அறிவீர்கள்? என்னை அறிவீர்கள். யார் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்? நான் எப்படி வரவில்லை? என்சுயமாய் வரவில்லை. யார் சத்திய முள்ளவர்? என்னை அனுப்பினவர். யாரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? என்னை அனுப்பியவரை.
29. நான் எதனால் அவரை அறிந்திருக்கிறேன் என்றார்? நான் அவரால் வந்தி ருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
30. அப்பொழுது என்ன செய்தார்கள்? அவரைப் பிடிக்கவகைதேடினார்கள். ஆனாலும் எதனால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை? அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்.
31. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: யார் வரும்போது, இவர் செய் கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்? கிறிஸ்து வரும்போது.
32. எப்பொழுது இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்? ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது.
33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு யாரிடத்திற்குப் போகிறேன் என்றார்?  என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்.

34. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்ன செய்யமாட்டீர்கள்? என்னைக் காணமாட்டீர்கள். எங்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார்? நான் இருக்கும் இடத்திற்கு.

35. அப்பொழுது யூதர்கள் என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண் டார்கள்? இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம் பண்ணு வாரோ?

36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்த மிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்ன செய்யவேண்டும் என்றார்? என்னி டத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து என்ன ஓடும் என்றார்? ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

39. எதைக்குறித்து இப்படிச் சொன்னார்? தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடை யப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப் படாதிருந்தபடியினால் எது இன்னும் அருளப்படவில்லை? பரிசுத்தஆவி. 
40. ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது என்ன சொன்னார் கள்? மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41. வேறுசிலர்: இவர் யார் என்றார்கள்? கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து எங்கிருந்தா வருவார் என்றார்கள்? கலிலேயாவிலிருந்தா வருவார்?
42. எங்கிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமி ருந்து கிறிஸ்து வருவார்.
43. இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே என்ன உண்டாயிற்று? பிரிவினையுண்டாயிற்று.
44. அவர்களில் சிலர் என்ன செய்ய மனதாயிருந்தார்கள்? அவரைப் பிடிக்க. ஆகிலும் ஒருவனும் என்ன செய்யவில்லை? அவர்மேல் கைபோடவில்லை.
45. பின்பு அந்தச் சேவகர் யாரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்? பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள். இவர்கள் அவர் களை நோக்கி என்னவென்று கேட்டார்கள்? நீங்கள் அவனை ஏன் கொண்டுவர வில்லை என்று கேட்டார்கள்.
46. சேவகர் பிரதியுத்தரமாக: யார் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்? அந்த மனுஷன் (இயேசு).
47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் என்ன செய்யப்பட்டீர்களா? வஞ்சிக்கப்பட் டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் யாரை விசுவாசித் ததுண்டா? அவனை (இயேசுவை) விசுவாசித்ததுண்டா? 
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் என்ன செய்யப்பட்டவர்கள் என்றார்கள்? சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50. இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய வன் யார்? நிக்கொதேமு. நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
51. ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று எது சொல்லுகிறதா என்றான்? நம்முடைய நியாயப்பிரமாணம்.
52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து யார் எழும்பு கிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்? ஒரு தீர்க்கதரிசியும்.

53. பின்பு அவரவர் எங்கே போனார்கள்? தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார் கள்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo