லூக்கா – 11

லூக்கா – 11
1. இயேசு ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி என்ன சொன்னான்? ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபம்பண்ண வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவை நோக்கி. யாருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக? பிதாவுடைய நாமம். யாருடைய ராஜ்யம் வருவ தாக? பிதாவுடைய ராஜ்யம். பிதாவுடைய சித்தம் எங்கே செய்யப்படுகிறது போல எங்கேயும் செய்யப்படுவதாக? பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
3. எதை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.
4. எவைகளை எங்களுக்கு மன்னியும்? எங்கள் பாவங்களை. நாங்களும் யாருக்கு மன்னிக்கிறோமே? எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும். எங்களை எதற்குட்படப்பண்ணாமல், எதினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்? சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். 
5. பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகித னாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய் என்ன என்று கேட்டுக் கொண்டான்? சிநேகிதனே, 
6. என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங் களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7. வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடே கூடப் படுத்திருக்கிறார்கள்,  நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 
8. பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், எதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையா னதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது.
9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது என்ன செய்வீர்கள்? கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? திறக்கப்படும்.
10. ஏனென்றால், யார் பெற்றுக்கொள்ளுகிறான்? கேட்கிறவன் எவனும். யார் கண்டடைகிறான்? தேடுகிறவன். யாருக்குத் திறக்கப்படும்? தட்டுகிறவனுக்கு.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா? கல்லை. மீனைக் கேட்டால் மீனுக்குப்பதி லாய் எதைக் கொடுப்பானா? பாம்பை.
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா?  தேளை.
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் எதைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்? பரிசுத்த ஆவியை.
14. பின்பு அவர் எதைத் துரத்தினார்? ஊமையாயிருந்த ஒரு பிசாசை. பிசாசு புறப்பட்டுப்போனபின்பு பேசியது யார்? ஊமையன். யார் ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள்.
15. அவர்களில் சிலர்: இவன் யாரைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்? பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு.
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி எதைக் காட்டவேண்டுமென்று அவரி டத்தில் கேட்டார்கள்? வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை.
17. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: எந்த ராஜ்யம் பாழாய்ப்போம் என்றார்? தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக் கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம் என்றார். எந்த வீடு விழுந்துபோம் என்றார்? தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்து போம் என்றார்.
18. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் எது எப்படி நிலைநிற்கும்? சாத்தானின் ராஜ்யம். இப்படியிருக்க, யாரைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே? பெயெல்செபூலைக்கொண்டு.
19. நான் யாராலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? பெயெல்செபூலினாலே. ஆகையால், அவர்களே உங்களை என்ன செய்கிறவர்களாயிருப்பார்கள்? நியாயந்தீர்க்கிறவர்களாயி ருப்பார்கள்.
20. நான் எதினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே? தேவனுடைய விரலினாலே.
21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, எது பத்திரப் பட்டிருக்கும்? அவனுடைய பொருள்.
22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், என்ன செய்வான்? அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக் கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23. என்னோடே இராதவன் எனக்கு யாராயிருக்கிறான்? விரோதியாயிருக்கி றான். என்னோடே சேர்க்காதவன் என்ன செய்கிறான்? சிதறடிக்கிறான்.
24. அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்க ளில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் எங்கு திரும்பிப் போவேன் என்று சொல்லும்? நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லும்.
25. அதில் வரும்போது, அது என்ன செய்யப்பட்டிருக்கக் காணும்? பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் காணும். 
26. திரும்பிப்போய், என்ன செய்யும்? தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவி களைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும். அப்பொ ழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எப்படியிருக்கும் என்றார்? அதிக கேடுள்ளதாயிருக்கும்.
27. அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி என்னவென்று சத்தமிட்டுச் சொன்னாள்? உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட் டுச் சொன்னாள்.
28. அதற்கு அவர்: அப்படியானாலும், யார் அதிக பாக்கியவான்கள் என்றார்? தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
29. ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர், இந்தச் சந்ததியார் யாராயிருக்கிறார்கள் என்றார்? பொல்லாதவர்களாயிருக்கிறார்கள். எதைத் தேடுகிறார்கள்? அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யாரின் அடை யாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை? யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்க ளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷ குமாரனும் யாருக்கு அடையாளமாய் இருப்பார்? இந்தச் சந்ததிக்கு அடையாள மாயிருப்பார்.
31. தென்தேசத்து ராஜஸ்திரீ எதைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து  வந்தாள்? சாலொமோனுடைய ஞானத்தை கேட்க. இதோ, சாலொமோனிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, என்ன செய்வாள்? இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு யார் மனந்திரும்பினார்கள்? நினிவே பட்டணத்தார். இதோ, யோனாவிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோ டெழுந்து நின்று, என்ன செய்வார்கள்? இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழே யாவது வைக்காமல், என்ன செய்வான்? உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34. கண்ணானது என்னவாயிருக்கிறது? சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் எப்படியிருக்கும்? வெளிச்சமா யிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் எப்படியிருக் கும்? இருளாயிருக்கும்.
35. ஆகையால் எதுக்கு எச்சரிக்கையாயிரு? உன்னிலுள்ள வெளிச்சம் இருளா காதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 
36. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயி ருந்தால், எதைப்போல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்? ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல.
37. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டான்? தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் போய் என்ன செய்தார்? பந்தியிருந்தார்.
38. அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் எதைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப் பட்டான்? கைகழுவாமலிருந்ததை.
39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் எதைச் சுத்தமாக்குகிறீர் கள்? போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள். உங்கள் உள்ளமோ எவைகளினால் நிறைந்திருக்கிறது? கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும்.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் எதையும் உண்டாக்கவில் லையோ? உட்புறத்தையும்.
41. உங்களுக்கு உண்டானவைகளில் என்ன கொடுங்கள்? பிச்சை கொடுங்கள். அப்பொழுது எது உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்? சகலமும்.
42. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும்  ன்ன கொடுக்கிறீர்கள்?   தசமபாகம்.  எவைகளையும் விட்டுவிடுகிறீர்கள்? நியாயத்தையும் தேவ அன்பையும். இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் என்ன செய்ய வேண்டும்? விடாதிருக்க வேண்டும்.
43. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. ஜெபஆலயங்களில், சந்தைகளில் எவை களை விரும்புகிறீர்கள்? ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை யும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
44. மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. எதைப் போல் இருக்கிறீர்கள்? மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப் போலிருக்கிறீர் கள். அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் எப்படியிருக்கிறது? தெரியாதிருக்கிறது. 
45. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதி னால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்? நியாயசாஸ்திரிகளில் ஒருவன்.
46. அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ என்ன செய்கிறீர்கள்? உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
47. உங்களுக்கு? ஐயோ. யாருக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்? உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்கு.
48. ஆகையால் நீங்கள் எதுக்கு சாட்சியிடுகிறீர்கள்? உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள். எப்படி யென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள்? கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49. ஆதலால் தேவஞானமானது சொல்லுவது என்ன? நான் தீர்க்கதரிசிகளை யும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்ற முதற் கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததி யினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகி றது.
51. நிச்சயமாகவே யாரிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல் லுகிறேன்? இந்தச் சந்ததியினிடத்தில்.
52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. எதை எடுத்துக் கொண்டீர்கள்? அறிவாகிய திறவுகோலை. நீங்களும் என்ன செய்கிறதில்லை? உட்பிரவேசிக் கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் என்ன செய்கிறீர்கள் என்றார்? தடைபண்ணுகிறீர்கள் என்றார். 

53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேய ரும் எதற்காக
54. அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார் கள்? அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக் கவும் அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கி னார்கள்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo