லூக்கா – 17

லூக்கா – 17
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள்.  அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்வாயாக? மன்னிப் பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதையளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல் லவா? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின்.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் யார் எதை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்? அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, யார் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப் பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும் என்று சத்தமிட்டார்கள்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன சொன்னார்? நீங்கள் போய், ஆசாரியர்க ளுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான்? ஒருவன்.
16. அவன் என்ன செய்தான்? அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். அவன் யாராயிருந்தான்? சமாரியனா யிருந்தான்.
17. அப்பொழுது இயேசு: யார் பத்துப்பேர் அல்லவா? சுத்தமானவர்கள். யார் எங்கே? மற்ற ஒன்பதுபேர்.
18. யாரை மகிமைப்படுத்துவதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? தேவனை மகிமைப்படுத்துகிற தற்கு.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அப்பொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனாலும் அதை என்ன செய்யமாட்டீர்கள்? காணமாட்டீர்கள்.
23. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், யார் உங்களிடத்தில் சொல் லுவார்கள்? சிலர். நீங்களோ என்ன செய்யுங்கள்? போகாமலும் பின்தொடராம லும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக் கிறதுபோல.
25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, என்ன செய்யப்பட வேண்டியதாயி ருக்கிறது? இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்பட வேண்டியதாயி ருக்கிறது.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் என்ன செய்தார் கள்? புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள். எது வந்து எல்லா ரையும் அழித்துப்போட்டது? ஜலப்பிரளயம்.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப் போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக் கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. எதை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்? தன் ஜீவனை. தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை என்ன செய்வான்? உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான்? கைவிடப்படுவான்.
35. திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்ன செய்யப்படுவாள்? ஏற்றுக்கொள்ளப்படுவாள். மற்றவள் என்ன செய்யப்படுவாள்? கைவிடப்படு வாள்.
36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக் கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கைவிடப்படுவான்.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்கள்? எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo