Shop Now: Bible, songs & etc
லூக்கா – 21
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, யார் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்? ஐசுவரியவான்கள்.
2. ஒரு ஏழை விதவை அதிலே எத்தனை காசைப் போடுகிறதையும் கண்டார்? இரண்டு.
3. யார் மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்த ஏழை விதவை.
4. அவர்களெல்லாரும் எதிலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்? தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து. இவளோ எதையெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டா யிருந்ததெல்லாம்.
5. பின்பு, எதைக்குறித்துச் சிலர் சொன்னார்கள்? சிறந்த கற்களினாலும் காணிக் கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து.
6. அப்பொழுது அவர் சொன்னது என்ன? நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? வஞ்சிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத் தைத் தரித்துக்கொண்டு என்னவென்று சொல்லுவார்கள்? நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள். அவர்களை என்ன செய் யாதிருங்கள்? பின்பற்றாதிருங்கள்.
9. எதைக் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்? யுத்தங்க ளையும் கலகங்களையுங் குறித்து. இவைகள் எப்பொழுது சம்பவிக்க வேண்டி யதே? முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும் எது உடனே வராது என்றார்? முடிவு.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் எழும்பு வது எது? ஜனம். ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்புவது எது? ராஜ்யம்.
11. பல இடங்களில் எவைகள் உண்டாகும்? மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்க ளும், கொள்ளைநோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து எவைகள் உண்டா கும்? பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களை என்ன செய்வார்கள்? பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலை களுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்கு எதற்கு ஏதுவாயிருக்கும்? சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும் படி உங்கள் மனதிலே என்ன செய்யுங்கள்? நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. யார் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத் தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்? உங்களை விரோதிக்கிறவர்கள்.
16. யாரால் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்? பெற்றாராலும், சகோதரராலும், பந்து ஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். உங்களில் சிலரை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
17. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம்.
18. ஆனாலும் எதில் ஒன்றாகிலும் அழியாது? உங்கள் தலைமயிரில்.
19. எதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்? உங்கள் பொறுமையினால்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, எது சமீபமாயிற்றென்று அறியுங்கள்? அதின் அழிவு.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்? மலை களுக்கு ஓடிப்போகக்கடவர்கள். எருசலேமிலிருக்கிறவர்கள் என்ன செய்யக் கடவர்கள்? வெளியே புறப்படக்கடவர்கள். நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்? நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எது நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே? எழுதியி ருக்கிற யாவும்.
23. அந்நாட்களில் யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ. பூமியின்மேல் என்ன உண்டாகும்? மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. எதினாலே விழுவார்கள்? பட்டயக்கருக்கினாலே விழுவார்கள். சகல புற ஜாதிகளுக்குள்ளும் என்ன செய்யப்படுவார்கள்? சிறைப்பட்டுப்போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப் படும்? புற ஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் என்ன தோன்றும்? அடையா ளங்கள். பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்? தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்? முழக் கமாயிருக்கும்.
26. எவைகள் அசைக்கப்படும்? வானத்தின் சத்துவங்கள். ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷரு டைய இருதயம் என்னவாகும்? சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் எப்படி வருகிறதை மேகத்தின்மேல் வருகிற தைக் காண்பார்கள்? மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்ப தால், நீங்கள் என்ன செய்யுங்கள் என்றார்? நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு எதைச் சொன்னார்? ஒரு உவமையைச்சொன்னார். எதைப் பாருங்கள்? அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது எது சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்? வசந்தகாலம்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, எது சமீபமா யிற்றென்று அறியுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
32. இவையெல்லாம் சம்பவிக்குமுன் எது ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
33. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ என்ன ஆவதில்லை? ஒழிந்து போவதில்லை.
34. எதற்கு எச்சரிக்கையாயிருங்கள்? உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினா லும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங் கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கை யாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது எதைப்போல வரும்? ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் எதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்? இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமார னுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். இராக்காலங்களில் என்ன செய்தார்? வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி என்ன செய் தார்கள்? அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
![I Love You Lord I Love You Lord](https://is2-ssl.mzstatic.com/image/thumb/Music118/v4/eb/4d/84/eb4d847d-7408-ba87-45bc-887b86f58e86/00738597208454.rgb.jpg/600x600bb.jpg)
Previous