லூக்கா – 23

லூக்கா – 23
1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரை யாரிடத்திற் குக் கொண்டுபோனார்கள்? பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
2. என்ன என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்? இவன் தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில் லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண் டோம் என்று அவர் மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ யூதருடைய ராஜாவா என்று  கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் சொல்லு கிறபடிதான் என்றார்.
4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி சொன்னது என்ன? இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காண வில்லை என்றான்.
5. அதற்கு அவர்கள் என்ன என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்? இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்  யூதேயாதேசமெங்கும்  உப தேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத் தோடே  சொன்னார்கள்.
6. கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, என்ன செய்தான்? இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருச லேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8. ஏரோது ஏன் இயேசுவைக் காணும்படி வெகுநாய் ஆசைகொண்டிருந்தான்? ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினா லும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும் பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந் தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, என்ன செய்தான்? மிகவும் சந்தோஷப் பட்டு,
9. அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொ ழியாக என்ன சொன்னார்? அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? அவர்மேல் பிடி வாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
11. அப்பொழுது ஏரோது என்ன செய்தான்? ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12. முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் என்ன ஆனார்கள்? சிநேகிதரானார்கள்.
13. பிலாத்து யாரைக் கூடிவரச் செய்தான்? பிரதான ஆசாரியர்களையும் அதிகா ரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்தான்.
14. பிலாத்து அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஜனங்களைக் கலகத்துக் குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர் கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டு கிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற் றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17. பிலாத்து ஏன் அப்படிச் சொன்னான்? பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18. ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு என்ன என்று சத்தமிட்டுக் கேட்டார் கள்? இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்த மிட்டுக் கேட்டார்கள்.
19. அந்தப் பரபாசென்பவன் யார்? நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20. பிலாத்து எதற்காக மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்? இயேசுவை விடுதலையாக்கமனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21. அவர்களோ என்ன என்று கூக்குரலிட்டார்கள்? அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவானகுற்றம் ஒன்றும் இவ னிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23. அப்படியிருந்தும் என்ன என்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்? அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று. எது மேற்கொண்டது? அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற் கொண்டது.
24. அப்பொழுது பிலாத்து என்ன என்று தீர்ப்பு செய்தான்? அவர்கள் கேட்டுக் கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்தான்.
25. பிலாத்துவின் தீர்ப்பு என்ன? கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித் தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத் தான்.
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, யாரைப் பிடித்து, சிலு வையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத் தார்கள்? நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனை.
27. யாரெல்லாம் அவருக்குப் பின்சென்றார்கள்? திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி யாருக்காக அழுங்கள் என்றார்? எருச லேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங் கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.
29. இதோ, யார் பாக்கியவதிகளென்றும், எவைகள் பாக்கியமுள்ளவைகளென் றும் சொல்லப்படும் நாட்கள் வரும்? இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவை களென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி என்ன என்று சொல்லத்தொடங்குவார் கள்? எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத் துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், எதுக்கு என்ன செய்யமாட்டார் கள் என்றார்? பட்டமரத்துக்கு.
32. வேறே யார் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோ கப்பட்டார்கள்? குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேர்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே என்ன செய்தார்கள்? அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியை யும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவரு டைய வஸ்திரங்களை அவர்கள் என்ன செய்தார்கள்? பங்கிட்டுச் சீட்டுப்போட் டார்கள்.
35. யார் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்? ஜனங்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து, என்ன சொன்னார்கள்? இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, என்ன செய்தான்? அவருக்குக் காடியைக் கொடுத்தான். காடியைக் கொடுத்து என்ன செய்தான்?

37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப்  பரி யாசம்பண்ணினார்கள்.

38. என்ன என்று எழுதி அவருக்கு மேலாக வைக்கப்பட்டது? இவன் யூதருடைய  ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.

39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் என்ன சொல்லி அவரை இகழ்ந்தான்? நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்க ளையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி என்ன என்ன கடிந்துகொண்டான்? நீ இந்த ஆக்கி னைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில் லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி என்ன என்று விண்ணப்பம் செய்தான்? ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி என்ன என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகி றேன் என்றார்? இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது என்ன ஆயிற்று? ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டா கக்கிழிந்தது.
46. இயேசு பிதாவை நோக்கி என்ன என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன் னார்? பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, என்ன செய்தார்? ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு என்ன சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான்? மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்ப வித்தவைகளைப் பார்த்தபொழுது, என்ன செய்தார்கள்? தங்கள் மார்பில் அடித் துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. யாரெல்லாம் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் கள்? அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவ ருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த் துக்கொண்டிருந்தார்கள்.
50. யோசேப்பு எப்படிப்பட்டவனாய் இருந்தான்? யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானு மாயிருந்தான்.
51. அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும்,  யூதர்களு டைய  ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
52. அவன் பிலாத்துவினிடத்தில் போய், என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத் தைக் கேட்டான்.
53. இயேசுவின் சரீரத்தை என்ன செய்தான்? அதை இறக்கி, மெல்லிய துப்பட்டி யிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54. அந்த நாள் எது? ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
55. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின் சென்று,  என்ன செய்தார்கள்? கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப் பட்ட விதத்தையும் பார்த்து,
56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo