லூக்கா – 9

லூக்கா – 9
1. அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, அவர்களுக்கு எதற்காக வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்? சகல பிசாசுகளையும் துரத் தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.
2. எதைக்குறித்து பிரசங்கிக்க அவர்களை அனுப்பினார்? தேவனுடைய ராஜ்யத் தைக்குறித்துப் பிரசங்கிக்க அனுப்பினார். யாரைச் சொஸ்தமாக்க அவர்களை அனுப்பினார்? பிணியாளிகளை.
3. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி எதை எடுத்துக்கொண்டு போகவேண் டாம் என்றார்? வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
4. எங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள் என்றார்? எந்த வீட்டிலே பிரவேசிக்கி றீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
5. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரை விட்டு நீங்கள் புறப்படும்போது, என்ன செய்யுங்கள் என்றார்? அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6. அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, என்ன செய்தார்கள்? எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

7. அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது எதனால் கலக்கமடைந்தான்? அவரால் செய்யப்பட்டயாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,

8. சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரி சிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்தான். 
9. யாரை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்? யோவானை.
10. அப்போஸ்தலர் திரும்பிவந்து, எவைகளை அவருக்கு விவரித்துச் சொன் னார்கள்? தாங்கள் செய்த யாவையும். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக் கொண்டு, எங்கே ஏன் போனார்? தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11. யார் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்? ஜனங்கள். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, எதைக்குறித்து அவர்களுடனே பேசினார்? தேவனு டைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசினார். யாரைச் சொஸ்தப்படுத் தினார்?  சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தி னார்.
12. சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி யாரை அனுப்பிவிட வேண்டும் என்றார்கள்? ஜனங்களை. ஏன்? நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும் படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு எதைக் கொடுங்கள் என்றார்? போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். 
14. ஏறக்குறைய எவ்வளவு புருஷர் இருந்தார்கள்? ஐயாயிரம் புருஷர் இருந்தார் கள். அவர்களைப் பந்திக்கு எப்படி உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்மு டைய சீஷர்களுக்குச் சொன்னார்? ஐம்பது ஐம்பதுபேராக.
15. அவர்கள் என்ன செய்தார்கள்? அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களை யும் எடுத்து, என்ன செய்தார்? வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத் தார்.
17. எல்லாரும் என்ன செய்தார்கள்? சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதி யான துணிக்கைகள் எத்தனை கூடைநிறைய எடுக்கப்பட்டது? பன்னிரண்டு.
18. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக் கையில், அவர்களை நோக்கி என்ன கேட்டார்? ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்  ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20. அப்பொழுது இயேசு என்ன கேட்டார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லு கிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் தேவ னுடைய கிறிஸ்து என்றான்.
21. அப்பொழுது இயேசு அவர்களுக்கு என்ன கட்டளையிட்டார்? அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
22. மேலும் மனுஷகுமாரன் என்ன செய்யப்பட வேண்டும் என்று சொன்னார்? பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த் தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பி னால் அவன் என்ன செய்ய வேண்டும் என்றார்? அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை என்ன செய்வான்? அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை என்ன செய்வான்? இரட்சித்துக்கொள்ளுவான்.
25. மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகி றானோ, அவனைக்குறித்து யார் எப்போது வெட்கப்படுவார்? மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27. இங்கே நிற்கிறவர்களில் சிலர் எதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப் பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தேவனுடைய ராஜ்யத்தை.
28. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் யாரைக் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்? பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும்.
29. அவர் ஜெபம்பண்ணுகையில், என்ன ஆயிற்று? அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. 
30. அன்றியும் யார் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணை பண்ணினார்கள்? மோசே எலியா என்னும் இரண்டுபேரும். 
31. அவர்கள்; எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாகள்? எருசலேமிலே நிறை வேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார் கள்.
32. பேதுருவும் அவனோடிருந்தவர்களும் எப்படியிருந்தார்கள்? நித்திரைமயக்க மாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து எதைக் கண்டார்கள்? அவரு டைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33. அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி என்ன சொன்னான்? ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமு மாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்ன தென்று அறியாமல் சொன்னான்.
34. இப்படி அவன் பேசுகையில், எது வந்து அவர்கள்மேல் நிழலிட்டது? ஒரு மேகம். அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் என்ன ஆனார்கள்? பயந்தார்கள்.
35. அப்பொழுது: என்ன என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று? இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.
36. அந்தச் சத்தம் உண்டாகையில் யார் ஒருவரே காணப்பட்டார்? இயேசு ஒருவரே காணப்பட்டார். அவர்கள் எதை அடக்கிவைத்திருந்தார்கள்? தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல் லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37. மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் என்ன செய்தார்கள்? அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, யாரைக் கடாட்சித்தருளவேண் டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்? என் மகனை. அவன் எனக்கு யாராயிருக்கிறான்? ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39. எது அவனைப் பிடிக்கிறது? ஒரு ஆவி. அப்பொழுது என்ன செய்கிறான்? அலறுகிறான். அது அவனை என்ன செய்கிறது? நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்குகிறது. பின்பு எது அரிதாயிருக்கிறது? அது அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40. அதைத் துரத்திவிடும்படி யாரை வேண்டிக்கொண்டேன்? உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன். அவர்களால் என்னவாயிற்று என்றான்? கூடாமற்போயிற்று என்றான்.
41. இயேசு பிரதியுத்தரமாக கேட்டது என்ன? விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமை யாயிருப்பேன்? யாரை இங்கே கொண்டுவா என்றார்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42. அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனை என்ன செய்தது? கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை என்ன செய்தார்? அதட்டி, இளைஞனைக் குணமாக்கினார். அவனை என்ன செய்தார்? அவன் தகப்பனிடத் தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43. அப்பொழுது எல்லாரும் எதைக்குறித்துப் பிரமித்தார்கள்? தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? 
44. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள். மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45. அவர்கள் எதை அறிந்துகொள்ளவில்லை? அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு என்னவாயிருந்தது? தோன்றா மல் மறைபொருளாயிருந்தது. எதைக்குறித்து அவர்கள் பயந்தார்கள்? அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46. பின்பு என்ன வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று? தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம்.
47. இயேசு எதை அறிந்தார்? அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்தார். யாரை எடுத்து, தமதருகே நிறுத்தினார்? ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தினார்.
48. அவர்களை நோக்கி: யாரை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்? இந்தச் சிறுபிள்ளையை. என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான்? என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். யார் பெரியவனாயிருப்பான் என்றார்? உங்களெல்லா ருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப் பான் என்றார்.
49. அப்பொழுது யோவான் அவரை நோக்கி யாரைத் தடுத்தோம் என்றான்? ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடி யால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50. அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் எங்கு இருக்கிறான் என்றார்? நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51. பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எங்கே போகத் தமது முகத்தைத் திருப்பினார்? எருசலேமுக்குப் போகத் தமது முகத் தைத் திருப்பினார். 
52. தமக்கு முன்னாக யாரை அனுப்பினார்? தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், என்ன செய்தார்கள்? அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரி யருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53. ஏன் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை? அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால்.
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது எதைச் செய்ய உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்? ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து என்ன சொல்லி அதட்டினார்? நீங்கள் இன்ன ஆவி யுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டினார்.
56. மனுஷகுமாரன் எதற்கு அல்ல, எதற்கே வந்தார் என்றார்? மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன் பின்பு அவர்கள் எங்கே போனார்கள்? வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57. அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றது யார்? அவர்கள் வழியிலே போகையில் ஒருவன்.
58. அதற்கு இயேசு: நரிகளுக்கு என்ன உண்டு? குழிகள். ஆகாயத்துப் பறவைக ளுக்கு என்ன உண்டு? கூடுகள். யாருக்கு தலைசாய்க்க இடமில்லை? மனுஷ குமாரனுக்கு. 
59. வேறொருவனை அவர் நோக்கி சொன்னது என்ன? என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன் சொன்னது என்ன? ஆண்டவரே,முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என் றான்.
60. அதற்கு இயேசு யார் யாரை அடக்கம்பண்ணட்டும் என்றார்? மரித்தோர் தங்கள் மரித்தோரை. நீ போய், எதைக்குறித்துப் பிரசங்கி என்றார்? தேவனு டைய  ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61. பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்று வேன், ஆனாலும் எதற்கு எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்? முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62. அதற்கு இயேசு: யார் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்? கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo