என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

1 என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
நீதிமொழிகள் 3:1

2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
நீதிமொழிகள் 3:2

3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக: நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
நீதிமொழிகள் 3:3

4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
நீதிமொழிகள் 3:4

5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
நீதிமொழிகள் 3:5

6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீதிமொழிகள் 3:6

7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, கர்த்தருக்கு பயந்து, தீமையை விட்டு விலகு.
நீதிமொழிகள் 3:7

8 அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
நீதிமொழிகள் 3:8

9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
நீதிமொழிகள் 3:9

10 அப்பொழுது உன் களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
நீதிமொழிகள் 3:10

11 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
நீதிமொழிகள் 3:11

12 தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார்.
நீதிமொழிகள் 3:12

13 ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
நீதிமொழிகள் 3:13

14 அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
நீதிமொழிகள் 3:14

15 முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது: நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
நீதிமொழிகள் 3:15

16 அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
நீதிமொழிகள் 3:16

17 அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
நீதிமொழிகள் 3:17

18 அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
நீதிமொழிகள் 3:18

19 கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
நீதிமொழிகள் 3:19

20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
நீதிமொழிகள் 3:20

21 என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.
நீதிமொழிகள் 3:21

22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 3:22

23 அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
நீதிமொழிகள் 3:23

24 நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்: நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
நீதிமொழிகள் 3:24

25 சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
நீதிமொழிகள் 3:25

26 கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
நீதிமொழிகள் 3:26

27 நன்மைசெய்பும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
நீதிமொழிகள் 3:27

28 உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த்திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
நீதிமொழிகள் 3:28

29 அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே.
நீதிமொழிகள் 3:29

30 ஒருவன் உனக்கு தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
நீதிமொழிகள் 3:30

31 கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே: அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
நீதிமொழிகள் 3:31

32 மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்: நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
நீதிமொழிகள் 3:32

33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
நீதிமொழிகள் 3:33

34 இகழ்வோரை அவர் இகழுகிறார்: தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
நீதிமொழிகள் 3:34

35 ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்: மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
நீதிமொழிகள் 3:35

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo