ஆலயம் நுழைவோம் பலியினில் – Alayam Nulaivom paliyinil
ஆலயம் நுழைவோம் பலியினில் – Alayam Nulaivom paliyinil
ஆலயம் நுழைவோம் பலியினில் இணைவோம்
ஆண்டவர் இயேசு அழைக்கின்றார்
ஆனந்தமுடனே அவரில்லம் செல்வோம்
ஆவலாய் நம்மை அழைக்கின்றார் – 2
வாருங்கள் வாருங்கள் இறைவனில் இணைந்திட
பாடுங்கள் பாடுங்கள் அவரினில் மகிழ்ந்திட – 2
1. பாசத்தின் பாசறை ஆலயமே
இது பாரங்கள் நீக்கிடும் நுழைவிடமே
நானே உலகின் ஒளி என்ற
நல் இறைவனின் அருள்சூழ் உறைவிடமே – 2
அலைகடல் அலையாய் திரண்டிடுவோம்
அசைந்திடும் தென்றலாய் நுழைந்திடுவோம் – 2
புதுவாழ்வு புத்துயிர் பெற்றிடுவோம்
இறைவாழ்வின் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
2. காரிருள் நீக்கிடும் கதிரவனே
நம் பாவங்கள் போக்கிடும் அணுச்சுடரே
பாரினில் தேடிடும் மனநிறைவே
நம் இறைமகன் இயேசுவின் திருப்பலியே – 2
படைப்புக்களோடு இணைந்திடுவோம்
படைத்தவன் திருப்பதம் சரணடைவோம் – 2
அடைக்கலம் தரும் நிழல் அலைந்திடுவோம்
அவரருள் அருவியில் நனைந்திடுவோம்
Tags: tamil catholic songs