Tamil Bible Vidukathai

Deal Score0
Deal Score0

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  :  உப்பு
தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?  :அன்பு
யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? : இரட்சிப்பு
இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்? ஈசாயென்னும் அடிமரம்
பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார் ? யோயாக்கீம்

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?

யோசுவா 3:16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்

தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?

அன்பு : ரோமர் 8:28 :அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ?

சங்கீதம் 3:8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.
யோனா 2:9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்?

ஏசாயா 11:1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார்

II இராஜாக்கள் 24:1 அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

II இராஜாக்கள் 23:36 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo