யோவான் – 5
1. இவைகளுக்குப்பின்பு யாருடைய பண்டிகை ஒன்று வந்தது? யூதருடைய பண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் எங்கே இருக்கிறது? ஆட்டுவாசலினருகே இருக்கிறது. அதற்கு எத்தனை மண்டபங்களுண்டு? ஜந்து மண்டபங்களுண்டு.
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, என்ன என்று காத்துக்கொண்டிருப்பார் கள்? தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
4. ஏன்? ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5. எத்தனை வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந் தான்? முப்பத்தெட்டு வருஷம்.
6. படுத்திருந்த அவனை கண்டது யார்? இயேசு. இயேசு அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி என்ன கேட்டார்? சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
7. அதற்கு வியாதிஸ்தன் சொன்னது என்ன? ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்ப டும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரு மில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடு கிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கிச் சொன்னது என்ன? எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் என்ன செய்தான்? அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் என்ன நாளாயி ருந்தது? ஓய்வு நாளாயிருந்தது.
10. ஆதலால் யார் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கி றதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார் கள்? யூதர்கள்.
11. அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர் என்ன சொன்னார் என்றான்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
12. அதற்கு அவர்கள்: என்னவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று.
13. சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறிந்திருந்தானா? அறிய வில்லை. அவ்விடத்தில் எதனால் இயேசு விலகியிருந்தார்? ஜனங்கள் கூட்ட மாயிருந்தபடியினால்.
14. அதற்குப்பின்பு இயேசு அவனை எங்கே கண்டார்? தேவாலயத்திலே கண்டார். இயேசு அவனைத் தேவாலயத்தில் கண்டு என்ன சொன்னார்? இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
15. அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் யார் என்று யூதர்க ளுக்கு அறிவித்தான்? இயேசு.
16. யூதர்கள் இயேசுவை ஏன் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்? இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால்.
17. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் என்ன செய்து வருகி றார்? கிரியைசெய்து வருகிறார். நானும் என்ன செய்துவருகிறேன் என்றார்? கிரியைசெய்து வருகிறேன் என்றார்.
18. யூதர்கள் இயேசுவை ஏன் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார் கள்? அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்மு டைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கின படியினாலே.
19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: எப்படி நான் உங்களுக்குச் சொல்லு கிறேன் என்றார்? மெய்யாகவே மெய்யாகவே. எதையேயன்றி, வேறொன்றை யும் பிதா தாமாகச் செய்யமாட்டார்? பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதா எவைகளைச் செய்கிறாரோ, அவைகளை யார் அந்தப்படியே செய்கிறார்? குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் யாரிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல் லாம் அவருக்குக் காண்பிக்கிறார்? குமாரனிடத்தில். நீங்கள் ஆச்சரியப்படத்தக் கதாக இவைகளைப் பார்க்கிலும் எதையும் அவருக்குக் காண்பிப்பார்? பெரி தான கிரியைகளையும்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் யாரை உயிர்ப்பிக்கிறார்? தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் யாருக்கு கொடுத்திருக்கிறார்? குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் யாரை கனம் பண்ணாதவனாயிருக்கி றான்? குமாரனை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
24. யாருக்கு நித்திய ஜீவன் உண்டு? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பி னவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. யார் ஆக்கினைத் தீர்ப் புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்.
25. யார் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்? மரித்தோர். அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் என்ன ஆவார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? பிழைப்பார் கள்.
26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, யார் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக் கிறார்? குமாரனும்.
27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், என்ன செய்யும்படிக்கு அதிகாரத் தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்? நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழி களிலுள்ள அனைவரும் எதைக் கேட்குங்காலம் வரும்? அவருடைய சத்தத் தைக் கேட்குங்காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் எதை அடையும்படி எழுந்திருக்கிறவர்க ளாக புறப்படுவார்கள்? ஜீவனை அடையும்படி. தீமைசெய்தவர்கள் எதை அடை யும்படி எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்? ஆக்கினையை அடையும் படி.
30. நான் என் சுயமாய் என்ன செய்கிறதில்லை? ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் எப்படி நியாயந்தீர்க்கிறேன்? கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக் குச் சித்தமானதை நான் தேடாமல், யாருக்குச் சித்தமானதையே நான் தேடுகிற படியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது? என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்த மானதையே.
31. என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி எப்படியிராது? மெய்யாயிராது.
32. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி என்ன சாட்சியென்று அறிந்திருக்கி றேன்? மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
33. நீங்கள் யாரிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள்? யோவானிடத்தில். அவன் எதற்குச் சாட்சி கொடுத்தான்? சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.
34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி யாருடைய சாட்சியல்ல? மனுஷருடைய சாட்சியல்ல. நான் எதற்காக இவைகளைச் சொல்லுகிறேன்? நீங்கள் இரட்சிக் கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
35. அவன் எப்படிப்பட்ட விளக்காயிருந்தான்? எரிந்து பிரகாசிக்கிற. நீங்களும் சிலகாலம் எதிலே களிகூர மனதாயிருந்தீர்கள்? அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் எப்படிப்பட்ட சாட்சி எனக்கு உண்டு? மேன்மையான சாட்சி. அது ஏன்? அதென்னவெனில், நான் நிறைவேற் றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
37. யார் என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்? என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருக்கா லும் எதைக் கேட்டதுமில்லை? அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை. எதைக் கண்டதுமில்லை? அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
38. எதனால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை? அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால்.
39. எவைகளை ஆராய்ந்து பாருங்கள்? வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங் கள். அவைகளால் உங்களுக்கு என்ன உண்டென்று எண்ணுகிறீர்கள்? நித்திய ஜீவன். என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் எவைகளே? வேதவாக் கியங்கள்.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு என்ன உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை? ஜீவன்.
41. நான் யாரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை? மனுஷரால்.
42. உங்களில் என்ன அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்? தேவ அன்பு.
43. நான் யார் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை? என் பிதாவின் நாமத்தினாலே. வேறொருவன் யாருடைய நாமத்தி னாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்? தன் சுயநாமத்தினாலே.
44. யாரால் மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? தேவனாலே மாத்திரம்.
45. யாரிடத்தல் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங் கள்? பிதாவினிடத்தில். யாரே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்? நீங்கள் நம்பு கிற மோசேயே.
46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், யாரையும் விசுவாசிப்பீர்கள்? என்னையும் விசுவாசிப்பீர்கள். யார் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே? மோசே.
47. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் யார் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்? நான் (இயேசு).