Nandriyaal En Ullam Ponguthea – நன்றியால் என் உள்ளம்
நன்றியால் என் உள்ளம்
பொங்குதே பொங்கி வழியுதே
வழிந்தும்மை துதித்தீடுதே
நன்றி நன்றி சொல்ல உம்மை துதித்துப்பாட
ஜீவ நாளெல்லாம் எனக்கு போதாதைய்யா
1. நான் உம்மை அறியாதிருந்தும் நீர் என்னை தேடி வந்தீர்
பாவங்கள் என்னை சூழ்ந்திருந்தும் பரிசுத்தர் என்னுள் வந்தீர்
என்னை கழுவினீரே உள்ளம் தேற்றினீரே
உம்மைபோல தூய்மையாய் மாற்றினீரே – நன்றியால்
2. கால்கள் தடுமாறும் நேரம் தாங்கி அணைத்தவரே
சோகங்கள் என்னை சூழ்ந்தபோதும் சோராமல் காத்தவரே
என்னை தாங்கினீரே உள்ளம் தேற்றினீரே
உம்மோடு உறவாட செய்தவரே – நன்றியால்
3. இருளான பாதைகளெல்லாம் ஒளியாக என்னுள் வந்தீர்
பாதை அறியாத நேரம் பகலவனாக வந்தீர்
என்னை நடத்தினீரே உள்ளம் தேற்றினீரே
பரலோக மகிமையை காட்டினீரே – நன்றியால்
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."