இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum Tamil christian lent days song lyrics
பல்லவி
ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே
அனுபல்லவி
ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே,
ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்;
ஐயா, நேயா, தூயா, ரட்சியும்;
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு
சரணங்கள்
1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா?
ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா,
தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா,
தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே,
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. – ஏசு
2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே,
ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே,
விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா,
வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே;
மேலா, கோலா, நூலா, நீயே
விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. – ஏசு
இயேசு நாதனே இரங்கும் lyrics, Yesu Nathanae Irangum lyrics, Tamil song
Yesu Nathanae Irangum song lyrics in English
Yesu Nadhanae Irangum En Yesu Nathanae
Aasaikiris Thena Anbulla Nesanae Arulae Thearulae Porulae
Aaval Aaginean Maha Piralaabam Moolhinean
Aiya Neaya Thooya Ratchiyum
Aabaththinaal parithabithu Nirkirean – Yesu
1.Aathuma Ratchakanae Unai Allamal Aatharavaar Aiya
Aathuma Naayagan Nee Enakkallavo Anbukoor Meiya
Tharunam Tharunam Kaividatheayum Thalaiva Valava Nalava
Thamathiyathae Kirubai seiyum Swami Ippothae
Thaatha Naatha Nee thaa Neegaa
Tharuma Pirakasanae Param Saruvesanae
2.Ainthu Kaayaththin Kirubai Kottaiyil Adaikkalanthavae
Aathamain Paavaththaal maanidan Aana mei Valvae
Vinthai Kirubai Alikka vendum Vimala Nimala Amala
Veru pannathae Migum Seeru Maaru Nannathae
Mela Kola noola Neeyae
Virumbi searum Kovae Thirumbi Paarum Devae – Yesu
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry.
ஆபகூக் : Habakkuk:2:3
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum’.
- It includes both the Tamil text and an English transliteration of the song.
- The lyrics emphasize themes of divine grace, support, and the significance of faith in Jesus.
- Multiple stanzas express a deep emotional connection with Jesus, addressing Him as a savior and protector.
- The song serves as a spiritual reflection during the lent days for Tamil Christians.
Estimated reading time: 2 minutes


