
புள்ளி மானை போல துள்ளி – Pulli Maanai Pola Thulli
புள்ளி மானை போல துள்ளி – Pulli Maanai Pola Thulli
உற்சாகமாக்கும் வேதம்
புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி
வானம்பாடி போல சிறகடிக்கும் தங்கா
திருவார்த்தை கேளு உற்சாகம் பிறக்கும்
துன்பங்கள் அனைத்தும் தன்னாலே விலகும்
உன் கவலை நீக்கும் அருமருந்து
ஊக்கமளிக்கும் நல்விருந்து
உணவாக இறைவன் தந்தது
உணர்ந்துபாரு உலகில் சிறந்தது
உற்சாகமாக்கும் வேதந்தானது – தம்பி தங்கை
1. வானம்பாடி நோக்கி பாரு கானம் பாடி மகிழுது
தன்னை படைத்த இறைவனை வாயார புகழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை
2. புள்ளிமானின் கூட்டம் பாரு துள்ளிதுள்ளி ஓடுது
தன்னை படைத்த இறைவனை நடனமாடி மகிழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை