எண்ணி முடியாத அதிசயங்கள் – Enni Mudiyatha Athisayangal Tamil Christian Song Lyrics in English.கோடி கோடி நன்றி Kodi Kodi Nandri, Written Tune and Sung by John Wesley Muthu.
எண்ணி முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) -(கோடி கோடி)
2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் –
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் –
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)(கோடி கோடி)
3.சிறுமையும் எளிமையுமான என்னையும் –
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
புழுதியிலிருந்து எடுத்தீரையா –
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி)
கோடி கோடி நன்றி – Kodi Kodi Nandri, எண்ணி முடியாத அதிசயங்கள் பாடல் வரிகள், Enni Mudiyatha Athisayangal lyrics
Enni Mudiyatha Athisayangal song lyrics in English
Enni Mudiyatha Athisayangal
En Vaalvil Seibavarae
Enni Mudiyatha Arputhangal
En Vaalvil Seibavarae -2
kodi kodi Nantri sonnalaum
Ummakthu Eedagumo
kodi kodi Nantri sonnalaum
En Vaalnaal Eedagumo-2
1.Yeattra velaiyilum Um Vaakkukal thanthu
Ennai soranthidamal kaaththathi Enni paaduvean
Sornthitta Vealaiyilum Kirubaigal thanthu
Ennai vilunthidamal sumanthathai pottri paaduvean -2
Idaividamal kaatheeraiya
Unthan vaarthaikalaal Nadathineeraiya -2- Kodi
2.Thanimaiyilae Naan Aluthapothellaam
Oru thaayai pola theattriyathai enni paaduvean
Devaikalaal Naan thigaitha pothellaam
Oru thagappanai poal thaangiyathai
Pottri paaduvean -2
Kuraikalillaam kirubaigal thanthu
Ennaiyum verukkamal Neasitheeraiya -2- kodi
3.Sirumaiyum Eliaiyumana Ennaiyum
Kondu singaraththil Vaitheerae Ummai paaduvean
Alankolamaga iruntha en vaalkkaiyai
Alangaramaga maattriyathai Pottri paaduvean-2
Puluthiyilirunthu Edutheeraiya
Enthan Thalaiyai neer uyarthineeraiya -2- kodi
பாடலில் உள்ள வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கும் போது நன்றி சொல்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலை நாங்கள் குடும்பத்தோடு கேட்கும்போதும் பார்க்கும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம், அநேக ஆத்துமாக்களுக்கு இது ஆசிர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்.
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘எண்ணி முடியாத அதிசயங்கள் – Enni Mudiyatha Athisayangal’.
- It includes the song’s lyrics, highlighting themes of gratitude and divine support in life.
- The song expresses thankfulness for God’s continuous presence and blessings during challenging times.
- Connecting with the song creates a sense of peace and worship for families.
- The author believes this song will be a blessing to many souls.


