அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean Tamil Christian Song lyrics
பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி
சரணங்கள்
1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! – அதி
2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும்போது – தப்
பாது நின் கிருபை தாங்கிடவேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? – அதி
3. நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினம்தினம் மெய்யே – அதி
அதிகாலையிலுமைத் தேடுவேன் lyrics, Athikaalayil Ummai Theduvean lyrics, Tamil songs
Athikaalayil Ummai Theduvean song lyrics in english
Athikaalaiyil Ummai Theaduvean Muzhu Manathaalae
Devaaseer Vaatham Peara Naaduvean Jeba Thaabaththaalae
Ithukaarum Kaaththa Thanthai Neerae
Inimealum Kaaththarul Seiveerae
Pathivaaga Ummilae Naan Nilaikkavae
Paththiramaai Enai Uththamanaakkidum Deve
1.Ponaraa Muluthum Paathukaatharulina Poothaa
Eppothum Engaludaniruppathaai Uraiththa Nal Naathaa
Eenappaavi Keathunai Logilundu Porpaathaa
Enakkaana Eesanae Vaana Raasana
Intha Naalilum Oru Panthamillaamal Kaarum Neethaa
2.Pala sothanaikalaal Soozhnthu Naan Kalangidumpothu
Thappaathu Nin Kirubai Thaangida Veanum Appothu
Vilakaathu En Samoogam Entra Vakkil Thavareathu
Visuvaasankondu Mei Paasamoondida
Vikkinam Yaavilum Vettri Kaanuvean Malaiveathu
3.Narar Yaavarkku Muttra Nanbanaai Nadanthidavaiyae T
Thee-Naavin Paavamara Nanmaigal Mozhinthida Seiyae
Paraloga Aaviyai Nal Maaripoleanilae Peiyae
Pugalaana Naathanae Veadhanai Pothanae
Pooranmaai Unai Pottruvean Thinam Thinam meiyae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean’.
- It includes sections like Pallavi, Anupallavi, and Charanangal, which convey deep spiritual themes.
- The lyrics express a longing for divine connection and strength during challenges.
- The song emphasizes faith and highlights God’s protective and guiding nature.
Estimated reading time: 2 minutes
4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
And God saw the light, that it was good: and God divided the light from the darkness.
ஆதியாகமம் | Genesis: 1


