- ஆவிக்குரியவர்கள் என்று நாம் அழைக்கப்படுகிறோம் (கலா-6: 1)
- ஆவிக்கேற்றபடி நடந்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (கலா-5: 16, ரோம-8: 1)
- ஆவிக்குரியவைகளை சிந்தித்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (ரோம-8: 5)
- ஆவியின் கனி கொடுத்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (கலா-5: 22)
- ஆவிக்குரிய யுத்தம்செய்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (எபே-6: 11-12)
நாம் செய்யவேண்டிய யுத்தம் ஆவிக்குரியதாக இருப்பதால் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆவிக்குரியவைகளாக இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. நம்மோடு யுத்தம் செய்கிற சாத்தானுடைய சேனைகள் ஆவிகளாக இருந்து, ஆவிக்குரிய ஆயுதங்களை நமக்கு விரோதமாகப் பயன்படுத்துகின்றன. எனவே அவைகளை எதிர்கொள்வதற்கு, அவைகளோடு யுத்தம் செய்வதற்கு, அவைகளை மேற்கொள்வதற்கு நமக்கும் ஆவிக்குரிய போராயுதங்களை தேவன் ஏற்படுத்தி வைத்துள்ளார்.
இந்த ஆயுதங்கள்:
1. நமக்கு அவசியமானவைகள் (யுத்தம் செய்வதற்கு)
2. நம்மை ஆயத்தமாக்குபவைகள் (கர்த்தரின் வருகைக்கு)
3. நம்மோடு இருக்க வேண்டிவைகள் (ஜெயமெடுப்பதற்கு)
4. நாம் பழக்கப்பட வேண்டியவைகள் (பயன்படுத்திட)
நம்முடைய யுத்தம் மாம்சத்திற்குரியது அல்ல, மாம்சத்தோடும் அல்ல. மாறாக சாத்தானுடைய ஆவிகளோடு ஆவிக்குரிய மண்ணடலத்திற்குரியதாக இருக்கிறது. எனவே பழக்கமில்லாமல் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திட முடியாது, ஆயுதங்களில்லாமல் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயமெடுக்கவும் முடியாது.
முதலாவது ஆயுதம்:
1தெச-5: 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.
1. மார்க்கவசம்: விசுவாசம், அன்பு
இது நம்முடைய இருதயத்தைப் பாதுகாப்பதற்குப் பயன்படும் ஆயுத-மாகும். உள்ளான மனிதன், உண்மையான நான், உள்ளம், மனிதனுடைய ஆவி என்று அழைக்கப்படுகிற பகுதிதான் இருதயம் ஆகும். நம்ஐடய முக்கிய பகுதியாக இது இருக்கிறது. சரீரப்பிரகாரமாகப் பார்த்தாலும் இரத்த ஓட்டத்தை இயக்குகிற பகுதியாக, சுவாசத்தை இயக்குகிற நுறையீரல் இருக்கும் பகுதியாக, நம்முடைய சரீரத்தின் மையப் பகுதியாக இருதயம் இருக்கிறது.
நம்முடைய இருதயத்தை சாத்தான் எவ்வாறு தாக்குகிறான்?
- பாவமன்னிப்பைப் பெற்றவர்களை குற்ற உணர்வைக் கொடுத்து, தாழ்வு மனப்பாண்மையைக் கொடுத்து, பின்மாற்றத்திற்குள்ளும் அவநம்பிக்கைக்குள்ளும் கொண்டுசெல்ல எத்தனிக்கிறான்.
- பாவமன்னிப்பைப் பெறாதவர்களை மனந்திரும்புதலுக்குள் வராதபடி இருதயக் கடினத்திற்குள்ளும், மனக்குருட்டாட்டத்திற் குள்ளும் நிலைத்திருக்கச் செய்கிறான்.
நாம் பாவமன்னிப்பைப் பெற்றிருக்கிறபடியால், நமக்கு மார்க்கவசமாக இருக்கும் ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். எபே-6: 14 நீதி என்னும் ‘மார்க்கவசம்‘ என்று சொல்கிறது. தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய நீதியை நமக்குள் வைத்து, நம்மை நீதிமான்களாக மாற்றிவிட்டார். மன்னிக்கப்பட்ட பாவம் திரும்ப நினைவிற்கு வந்து குற்றஉணர்வு நம்மை மேற்கொள்ளுமானால், உங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கைசெய்து, ‘தேவனால் நான் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று சொல்லுங்கள். ‘தேவன் என்மேல் அன்பாக இருக்கிறார், நானும் தேவனிடத்தில் அன்புகூருகிறேன், அவருடைய அன்பிலிருந்து எதுவும் என்னைப் பிரிக்க முடியாது’ என்று சொல்லுங்கள்.
- யுத்தம் செய்திட ஆயுதங்கள் வேண்டும்
- ஜெயமெடுக்க யுத்தம் செய்யவேண்டும்
- ஜெயம்கொள்பவர்கள் பலன் பெறுவார்கள்