யோவான் – 4
1. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ் நானங் கொடுக்கிறாரென்று யார் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தார்?பரிசேயர்.
2. யூதேயாவைவிட்டு மறுபடியும் எங்கு போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
3. இயேசு தாமே என்ன கொடுக்கவில்லை? ஞானஸ்நானங்கொடுக்கவில்லை. யார் ஞானஸ்நானங்கொடுத்தார்கள்? அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
4. அவர் எந்த நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது? சமாரியா.
5. இயேசு எந்த ஊருக்கு வந்தார்? யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
6. அங்கே என்ன இருந்தது? யாக்கோபுடைய கிணறு இருந்தது. இயேசு பிரயா ணத்தினால் இளைப்படைந்தவராய் என்ன செய்தார்? அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறைய ஆறாம்மணி வேளை யாயிருந்தது.
7. அவருடைய சீஷர்கள் ஏன் ஊருக்குள்ளே போயிருந்தார்கள்? போஜனபதார்த் தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி என்ன கேட்டார்? தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி கேட்டது என்ன? நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீ யாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக் குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தா யானால், நீ என்ன செய்திருப்பாய் என்றார்? நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய் என்றார். அவர் உனக்கு எதைக் கொடுத்திருப்பார் என்றார்? ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் என்ன இல்லையே என்றாள்? பாத்திரமில்லையே என்றாள். எதுவும் ஆழமாயிருக்கி றதே என்றாள்? கிணறும் ஆழமாயிருக்கிறதே என்றாள். பின்னை எங்கேயிரு ந்து உமக்கு என்ன உண்டாகும் என்றாள்? ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்றாள்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த யாரைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே என்ன செய்ததுண்டே என்றாள்? குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் என்ன உண்டாகும் என்றார்? தாகமுண்டாகும் என்றார்.
14. யாருக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது? நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக்கொடுக் கும் தண்ணீர் அவனுக்குள்ளே எப்படிப்பட்ட நீரூற்றாயிருக்கும் என்றார்?நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எதற்காக எனக்கு அந்தத் தண் ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்? எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி.
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், யாரை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்? உன் புருஷனை.
17. அதற்கு அந்த ஸ்திரீ: எனக்கு யார் இல்லை என்றாள்? புருஷன் இல்லை என் றாள். இயேசு அவளை நோக்கி: என்னவென்று நீ சொன்னது சரிதான்? எனக்குப் புருஷன் இல்லையென்று சொன்னது.
18. எப்படியெனில், எத்தனை புருஷர் உனக்கிருந்தார்கள்? ஜந்து புருஷர். இப் பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு யாரல்ல? புருஷனல்ல. இதை எப்படி சொன்னாய் என்றார்? இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் யார் என்று காண்கிறேன்? தீர்க்கதரிசி.
20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே என்ன செய்துகொண்டு வந்தார்கள்? தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் எங்கே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்? எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே.
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எதை நம்பு? நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் எங்கு மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகி றது? இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல.
22. நீங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்? அறியாததை. நாங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறோம்? அறிந்திருக்கிறதை. ஏனென்றால் எது யூதர்கள் வழியாய் வருகிறது? இரட்சிப்பு.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை எப்படி தொழுது கொள்ளும் காலம் வரும்? ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள் ளுங்காலம் வரும். அது எப்பொழுது வந்திருக்கிறது? இப்பொழுதே வந்திருக்கி றது. யாரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்? தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்.
24. யார் ஆவியாயிருக்கிறார்? தேவன். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்? ஆவியோடும் உண்மை யோடும்.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: யார் வருகிறார் என்று அறிவேன்? கிறிஸ்து என்னப்படுகிற மேசியா. அவர் வரும்போது எல்லாவற்றையும் என்ன செய் வார் என்றாள்? நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: அவர் யார் என்றார்? உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, எதைப்பற்றி ஆச்சரியப்பட் டார்கள்? அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி. ஆகிலும் என்னவென்று ஒருவனும் கேட்கவில்லை? என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, என்ன செய்தாள்? ஊருக்குள்ளே போனாள். ஜனங்களை நோக்கி சொன்னது என்ன?
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு யாரிடத்தில் வந்தார்கள்? இயேசுவிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி என்ன என்று வேண்டிக் கொண்டார்கள்? ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு என்ன எனக்கு உண்டு என்றார்? நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து என்னவென்று சொன் னார்கள்? யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார் கள்.
34. இயேசு அவர்களை நோக்கி எது என்னுடைய போஜனமாயிருக்கிறது என் றார்? நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
35. எது வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகி றதில்லையா? அறுப்புக்காலம். இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப் புக்கு விளைந்திருக்கிறதென்று எதை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? உங்கள் கண்களை.
36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப் படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, எதுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்? நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
37. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற எது இதினாலே விளங்குகிறது? மெய்யான வழக்கச்சொல்.
38. நீங்கள் எதை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்? பிரயாசப்பட்டுப் பயிரி டாததை. யார் பிரயாசப்பட்டார்கள்? மற்றவர்கள். அவர்களுடைய பிரயாசத் தின் பலனை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்? பெற்றீர்கள் என்றார்.
39. எதினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாச முள்ளவர்களானார்கள்? நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார் கள்? தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று. அவர் எத்தனை நாள் அங்கே தங்கி னார்? இரண்டு நாள்.
41. அப்பொழுது எதினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்தார்கள்? அவ ருடைய உபதேசத்தினிமித்தம்.
42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உப தேசத்தை நாங்களே, கேட்டு, யார் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார் கள்? அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர்.
43. இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, எங்கே போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
44. ஒரு தீர்க்கதரிசிக்கு எந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல் லியிருந்தார்? தன் சொந்த ஊரிலே.
45. அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? கலிலேயர். அவர்களும் எங்கு போயிருந்தார்கள்? பண்டிகைக்குப் போயிருந் தார்கள்.
46. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின எந்த ஊருக்கு மறுபடி யும் வந்தார்? கலிலேயாவிலுள்ள கானா. அப்பொழுது கப்பர்நகூமிலே யார் வியாதியாயிருந்தான்? ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியா தியாயிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், என்னவென்று அவரை வேண் டிக்கொண்டான்? தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண் டான்.
48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் எவைகளைக் காணாவிட் டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்? அடையாளங்களையும் அற்புதங்களை யும் காணாவிட்டால்.
49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, எதற்குமுன்னே வரவேண்டும் என்றான்? என் பிள்ளை சாகிறதற்குமுன்னே.
50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் என்ன ஆனான் என் றார்? பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், எதை நம்பிப்போனான்? இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, என்னவென்று அறிவித்தான்? உம்முடைய குமாரன் பிழைத்திருக்கி றான் என்று அறிவித்தார்கள்.
52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தபோது அவர்கள் சொன்னது என்ன? நேற்று ஏழா மணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.
53. எதை அறிந்து அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்? உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து.
54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த எத்தனையாவது அற்புதம்? இரண்டாம் அற்புதம்.