யோவான் – 8
1. இயேசு எங்கு போனார்? ஒலிவமலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி எங்கு வந்தபோது, ஜனங்களெல்லா ரும் அவரிடத்தில் வந்தார்கள்? தேவாலயத்திற்கு. அவர் உட்கார்ந்து அவர்க ளுக்கு என்ன பண்ணினார்? உபதேசம்பண்ணினார்.
3. அப்பொழுது யாரை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தினார்கள்? விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை.
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் எப்படிப் பிடிக்கப்பட்டாள்? கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களை என்ன செய்யவேண்டுமென்று மோசே நியாயப்பிரமா ணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார் கள்? கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று.
6. அவர்மேல் எதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள்? குற்றஞ்சுமத்துவதற்கான காரணம். இயேசுவோ என்ன செய்தார்? குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: என்ன சொன்னார்? உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலா வது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்.
8. அவர் மறுபடியும் என்ன செய்தார்? குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, என்ன செய்தார்கள்? தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவ ராய்ப் போய்விட்டார்கள். இயேசு எங்கேயிருந்தார்? தனித்திருந்தார். அந்த ஸ்திரீ எங்கே நின்றாள்? நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல் என்ன கேட்டார்? ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவ னாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11. அதற்கு அவள் சொன்னது என்ன? இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை என்ன செய்வதில்லை? ஆக்கினைக்குள்ளா கத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனி என்ன செய்யாதே என்றார்? பாவஞ்செய் யாதே என்றார்.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு என்னவாயிருக் கிறேன்? ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் எப்படியிருப்பான் என்றார்? இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே என்ன கொடுக்கிறாய்? சாட்சி கொடுக்கிறாய். எது உண்மையானதல்ல என்றார்கள்? உன்னுடைய சாட்சி.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி எப்படியிருக்கிறது? உண்மையாயிருக்கிறது. ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் என்ன செய்திருக்கிறேன்? அறிந்திருக்கிறேன். நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் என்ன செய்கிறீர்கள்? அறியீர்கள்.
15. நீங்கள் எதற்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள்? மாம்சத்துக்கேற்றபடி. நான் ஒருவனையும் என்ன செய்கிறதில்லை? நியாயந்தீர்க்கிறதில்லை.
16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு எப்படியிருக்கும்? சத்தியத்தின்படியிருக் கும். ஏன்? ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17. இரண்டுபேருடைய சாட்சி என்னவென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே? உண்மையென்று.
18. நான் யாரைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன்? என்னைக் குறித்து. என்னை அனுப்பின பிதாவும் யாரைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்? என்னைக்குறித்து.
19. அப்பொழுது அவர்கள்: யார் எங்கே என்றார்கள்? உம்முடைய பிதா. இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் என்ன செய்வீர்கள்? அறியீர்கள். என் பிதாவை யும் என்ன செய்வீர்கள்? அறியீர்கள். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் யாரையும் அறிவீர்கள் என்றார்? என் பிதாவையும் அறிவீர்கள்.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம் பண்ணுகிறபோது, எந்த இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார்? தருமப்பெட்டியிருக்கும் இடத்தில். ஏன் ஒருவ னும் அவரைப் பிடிக்கவில்லை? அவருடைய வேளை இன்னும் வராதபடியி னால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி எதிலே சாவீர்கள் என்றார்? உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். எங்கு உங்களால் வரக்கூடாது என்றார்? நான் போகிற இடத்துக்கு வர உங்க ளால் கூடாது என்றார்.
22. அப்பொழுது யூதர்கள் என்ன என்று பேசிக்கொண்டார்கள்? நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எங்கிருந்து உண்டானவர்கள் என்றார்? தாழ்விலிருந்துண்டானவர்கள் என்றார். நான் எங்கிருந்து உண்டானவன் என்றார்? உயர்விலிருந்துண்டானவன் என்றார். நீங்கள் எதிலிருந்து உண்டான வர்கள் என்றார்? இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள் என்றார். நான் எதிலி ருந்து உண்டானவனல்ல என்றார்? இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல என்றார்.
24. ஆகையால் நீங்கள் எவைகளில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன் என்றார்? உங்கள் பாவங்களில் சாவீர்கள். நானே அவர் என்று நீங்கள் விசுவாசி யாவிட்டால் எதிலே சாவீர்கள் என்றார்? உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
25. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? நீர் யார் என்றார்கள். இயேசு அவர் களை நோக்கி சொன்னது என்ன? நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியி ருக்கிறவர்தான்.
26. எதற்கு எனக்கு அநேக காரியங்களுண்டு என்றார்? உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப் பினவர் யார்? சத்தியமுள்ளவர். நான் எவைகளையே உலகத்துக்குச் சொல்லு கிறேன் என்றார்? அவரிடத்தில் கேட்டவைகளையே.
27. யாரைக் குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்? பிதா வைக்குறித்து.
28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் யாரை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்? மனுஷகுமாரனை.
29. என்னை அனுப்பினவர் யாருடனே கூட இருக்கிறார்? என்னுடனே கூட இருக்கிறார். எதை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்? பிதாவுக்குப் பிரியமானவைகளை.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் என்ன வைத் தார்கள்? விசுவாசம் வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் எப்பொழுது மெய் யாகவே என் சீஷராயிருப்பீர்கள் என்றார்? என் உபதேசத்தில் நிலைத்திருந் தால்.
32. எதையும் அறிவீர்கள்? சத்தியத்தையும். எது உங்களை விடுதலையாக்கும் என்றார்? சத்தியம்.
33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் யாருடைய சந்ததியாயி ருக்கிறோம் என்றார்கள்? ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருக் காலும் ஒருவனுக்கும் என்னவாக இருக்கவில்லை? அடிமைகளாயிருக்க வில்லை. என்னவென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்? விடுதலையா வீர்களென்று.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறன் எவனும் எதுக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? பாவத்துக்கு.
35. யார் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்? அடிமையானவன். யார் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்? குமாரன்.
36. ஆகையால் யார் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுத லையாவீர்கள்? குமாரன்.
37. நீங்கள் யாரென்று அறிவேன்? ஆபிரகாமின் சந்ததியாரென்று. ஆனாலும் உங்களுக்குள்ளே எது இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்? என் உபதேசம்.
38. நான் எதைச் சொல்லுகிறேன்? என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லு கிறேன். நீங்களும் எதைச் செய்கிறீர்கள் என்றார்? உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
39. அதற்கு அவர்கள்: யார் எங்கள் பிதா என்றார்கள்? ஆபிரகாம். இயேசு அவர் களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் எதைச் செய்வீர் களே என்றார்? ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே என்றார்.
40. நீங்கள் யாரைக் கொல்லத் தேடுகிறீர்கள்? தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள். யார் இப்படிச் செய்யவில்லையே? ஆபிரகாம்.
41. நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்றார்? உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் எதினால் பிறந்தவர்களல்ல? வேசித்தனத்தினால். ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் யார் என்றார்கள்? தேவன் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத் தில் எப்படியிருப்பீர்கள்? அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் யாரிடத்திலி ருந்து வந்திருக்கிறேன்? தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் சுயமாய் வரவில்லை, யார் என்னை அனுப்பினார்? தேவனே.
43. எதை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் வசனத்தை. எதைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? என் உபதேசத்தை.
44. நீங்கள் யாரால் உண்டானவர்கள்? உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். எதின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்? உங்கள் பிதாவினு டைய இச்சைகளின்படி. அவன் ஆதிமுதற் கொண்டு யாராயிருக்கிறான்? மனுஷகொலைபாதகனாயிருக்கிறான். எது அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை? சத்தியம். அவன் யாராய் இருக்கிற படியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்? பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால்.
45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை என்ன செய்கிறதில்லை? விசுவாசிக்கிறதில்லை.
46. என்னிடத்தில் எது உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? பாவம். நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை என்ன செய்கிறதில்லை? விசுவாசிக்கிறதில்லை.
47. தேவனால் உண்டானவன் எவைகளுக்குச் செவிகொடுக்கிறான்? தேவனு டைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான். நீங்களும் எதினால் செவிகொடா மலிருக்கிறீர்கள் என்றார்? தேவனால் உண்டாயிராதபடியினால்.
48. அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எது சரிதானே என்றார் கள்? உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல் லுகிறது.
49. அதற்கு இயேசு: நான் யாரல்ல? பிசாசுபிடித்தவனல்ல. நான் யாரைக் கனம் பண்ணுகிறேன்? என் பிதாவை. நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்? கனவீ னம்பண்ணுகிறீர்கள்.
50. நான் எனக்கு எதைத் தேடுகிறதில்லை? மகிமையை. அதைத் தேடி யார் இருக்கிறார்? நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
51. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் எதைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? மரணத்தை.
52. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ யாரென்று இப்பொழுது அறிந்தி ருக்கிறோம்? பிசாசுபிடித்தவனென்று. யார் மரித்தார்கள்? ஆபிரகாமும் தீர்க்க தரிசிகளும். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென் றைக்கும் எதை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்? மரணத்தை.
53. யாரிலும் நீ பெரியவனோ? எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும். அவர் மரித் தார், தீர்க்கதரிசிகளும் என்ன ஆனார்கள்? மரித்தார்கள். யாரை நீ எப்படிப்பட்ட வனாக்குகிறாய் என்றார்கள்? உன்னை (இயேசுவை).
54. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை எப்படியிருக்கும்? வீணாயிருக்கும். யார் என்னை மகிமைப்படுத்துகிற வர்? என் பிதா. அவரை யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்? உங்கள் தேவ னென்று.
55. ஆயினும் நீங்கள் யாரை அறியவில்லை? என் பிதா (உங்கள் தேவன்). நான் அவரை என்ன செய்திருக்கிறேன்? அறிந்திருக்கிறேன். அவரை அறியேன் என்று சொல்வேனாகில் யாரைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்? உங்க ளைப்போல. அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையை என்ன செய்து கொண்டிருக்கிறேன்? கைக்கொண்டிருக்கிறேன்.
56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் யாருடைய நாளைக் காண ஆசையாயிருந் தான்? என்னுடைய நாளைக் காண. கண்டு என்ன செய்தான் என்றார்? களிகூர்ந் தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் எத்தனை வயதாக வில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்? ஜம்பது வயது.
58. அதற்கு இயேசு: யார் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? ஆபிர காம்.
59. அப்பொழுது அவர்மேல் எறியும்படி எவைகளை எடுத்துக்கொண்டார்கள்? கல்லுகளை. இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, எதை விட்டுப் போனார்? தேவாலயத்தை விட்டுப்போனார்.