அன்பின் வட்டம்
1யோவான்-4: 8 தேவன் அன்பாகவே இருக்கிறார்
கிறிஸ்தவமானது முழுமுழுக்க அன்பை மையமாகக் கொண்டாதாக இருக்கிறது. தேவனிடத்தில் அன்பு இருக்கிறது என்பதைவிட தேவனே அன்பாக இருக்கிறார் என்பதுதூன் உண்மை. அல்லது அன்பு என்றாலே அது தேவனை வெளிப்படுத்துகிற அடையாளமாக இருக்கிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இணைப்பு என்பது அன்பால் நடைபெற்றிருக்கிறது. தேவனால் படைக்கப்பட்டு தேவனோடு அன்பிலே இணைக்கப்பட்டவனாக இருந்த முதல் மனிதனை சாத்தான் பிரித்தான்.
ஆதி-3: 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
கர்த்தருடைய சந்நிதிக்கு விலகுதல் என்பது தேவன் விரும்பாத ஒன்றாகும்;. தம்மோடு இருப்பதற்காகத் தான் மனிதனைத் தேவன் படைத்தார். ஆனால் பாவத்தின் மூலம் தேவனைவிட்டு அல்லது அன்பைவிட்டு விலகிச்சென்றான். ஆனாலும் தேவன் மனிதனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் தம்மோடு இணைப்பதற்காக தாமே மனிதனாக பூமிக்குவந்து பாவத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முழுச்செயல்பாட்டையும் அவரே மேற்கொண்டார். பாவத்திற்கான தண்டனையைத் தன்மேலே ஏற்றுக்கொண்டார். அவர் மூலமாக வரும் பாவமன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ளும்போது நாம் மீண்டும் அன்பின் தேவனிடம் வந்து சேருகிறோம்.
அன்போடு இணைக்கபட்ட நாம் தேவனைக் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியவைகள்:
தேவன் உங்களுக்குச் செய்தவைகள்:
1. உங்களுடைய படைப்பு: (சங்-139: 13-16)
என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
ஒரு மனிதனையும் ஒரேமாதிரியான சாயலில் தேவன் படைக்கவில்லை. உலகில் 700 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இப்பொழுது இருக்கிறார்கள், ஏற்கெனவே எத்தனையோ கோடி மக்கள் வாழ்ந்து மரித்திருக்கிறார்கள், இன்னும் எத்தனையோ கோடிப்பேர் பிறக்கிவிருக்கிறார்கள். ஒருவர்கூட மற்றவர்போல இல்லை. இது எதைக் குறிக்கிறது? ஒவ்வொரு நபரை வடிவமைப்பதிலும் தேவன் தனிக்கவனம் செலுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, இரசித்து, மகிழ்ந்து படைக்கிற வேலையைச் செய்கிறார். மனுக்குலப் படைப்பு என்பது உருக்கி ஊற்றுப்பட்டு உருவாக்கும் ஒரு தாயிர்ப்பு அல்ல (Molding project)).
2. உங்களுடைய இரட்சிப்பு: (எபி-2: 4)
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
நம்முடைய இரட்சிப்பிலும் தேவனுடைய படைப்பு நடைபெற்றிருக்கிறது. 2கொரி-5: 17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதுப்படைப்பாயிருக்கிறான் என்று சொல்கிறது, நாம் பாவிகளாக இருக்கையில், நாம் தேவனைவிட்டுமு விலிகனவர்களாக இருக்கையில், நாம் சத்துருக்களாக இருக்கையில், நாம் அவரைத் தேடிச்செல்லவில்லை, அவரே நம்மைத் தேடிவந்தார், பாவங்களை மன்னித்தார், பரிசுத்தமாக்கினார், நீதமான்களாக்கினார், அழைத்தார், தெரிந்தெடுத்தார், அபிஷேகித்தார்,
நாம் அவரோடுகூடவே இருக்கவேண்டும் என்று நம்மை அவருக்குள் வைத்து, நமக்குள்ளே அவர் வாசம்பண்ணுகிறார். இவையெல்லாவற்றிலும் தேவனுடைய அன்பை நாம் பார்க்க முடிகிறது.
முதலாவது இருக்கிற பெரிய வட்டம் தேவனைக் குறிக்கிறது. அன்பு மேலான பெரிய வட்டம்போலிக்கிற அவரிடத்திலிருந்து புறப்பட்டு எல்லாரிடத்திற்கும் ஊற்றப்படுகிறதாக இருக்கிறது.
இரட்சிப்பிற்கு முன்பும், இரட்சிப்பிற்குப் பிறகும்:
இரட்சிப்பிற்கு முன்பும், இரட்சிப்பிற்குப் பிறகும் உங்களுக்கான தேவனுடைய அன்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்பே தேவன் உங்கள்மீது அன்பாயிருந்தாரா? எப்படி?
நீங்கள் படைக்கப்பட்ட விதத்தையும், நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களோடு கூடஇருக்கவேண்டிய நபர்களையும், உங்களுக்கான காலத்தையும் ஏன் உங்களைக்குறித்த அனைத்தையுமே அவர் வடிவமைத்த விதத்தையும் யோசித்துப்பாருங்கள். எதுவுமே தற்செயலாகவோ
அல்லது தவறுதலாகவோ நடந்தது இல்லை. எல்லாம் தேவதிட்டத்தின் கீழ்தான் அமைந்திருக்கிறது.
ரோமர்-5: 8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
இரட்சிக்கப்பட்ட பிறகு நீங்களும் நானும் என்ன செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஆதாம் பாவத்தினால் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகிச்சென்றான் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். நம்மை இரட்சிப்பதன் மூலம் நம்மைக்குறித்த தேவனுடைய விருப்பம் என்னவென்றால், நாம் தேவனுடைய சந்நிதிக்கு நெருங்கி வந்து அவரோடு எப்போதும் இருப்பதுதான்.
தேவன் நம்மை நேசிக்கிறார்.
தேவனை நாம் நேசிக்கிறோம்
மற்றவர்கள் நம்மை நேசிக்கிறார்கள்
மற்றவர்களை நாம் நேசிக்கிறோம்
மற்றவர்கள் நம்மை நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறோம்
மற்றவர்களை நாம் நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
இவையனைத்துமே தேவனுடைய அன்பின் சுபாவத்தை வெளிப்படுத்துகின்றன. அன்பு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படுதல் பாவத்திற்குள் நடத்திச் செல்லுகிறது. அன்பு தடைசெய்யப்படுதல் விரக்தியை உண்டாக்குகிறது.