லூக்கா – 10
1. இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எத்தனை பேரை நியமித்தார்? எழுபது பேரை நியமித்தார். தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்? இரண் டிரண்டு பேராக அனுப்பினார்.
2. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: எது மிகுதி என்றார்? அறுப்பு மிகுதி. யார் கொஞ்சம் என்றார்? வேலையாட்களோ கொஞ்சம். ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு யாரை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங் கள்? வேலையாட்களை.
3. புறப்பட்டுப்போங்கள்; எவைகளை எவைகளுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்? ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக் குள்ளே.
4. எவைகளையெல்லாம் கொண்டுபோக வேண்டாம்? பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம். வழியிலே ஒருவரையும் என்ன செய்ய வேண்டாம்? வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: என்னவென்று முதலாவது சொல்லுங் கள்? இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல் லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதா னம் அவனிடத்தில் தங்கும். சமாதான பாத்திரன் அங்கே இல்லாதிருந்தால் என்ன ஆகும்? சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, என்ன செய்யுங்கள்? அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள். வேலையாள் எதற்குப் பாத்திரனா யிருக்கிறான்? தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு என்ன செய்யாதிருங்கள்? போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நீங்கள் எவைகளை புசியுங்கள்? அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசியுங்கள்.
9. யாரை சொஸ்தமாக்குங்கள்? அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்த மாக்குங்கள். எது உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் என்ன செய்யுங்கள்? அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோத மாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக் குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல் லுங்கள்.
12. அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே எந்த நாட் டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? சோதோம் நாட்டிற்கு.
13. கோராசீன் பட்டணமே, உனக்கு என்ன? உனக்கு ஐயோ. பெத்சாயிதா பட்டணமே, உனக்கு என்ன? உனக்கு ஐயோ. உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொ ழுதே என்ன செய்திருப்பார்கள்? இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந் திரும்பியிருப்பார்கள்.
14. நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எவைகளுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும? தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகு வாயிருக்கும்.
15. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ என்ன செய்யப்படுவாய்? நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்.
16. இயேசு சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் யாருக்குச் செவிகொடுக்கிறான் என்றார்? எனக்குச் செவிகொடுக்கிறான். உங்களை அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டை பண்ணுகிறான் என்றார்? என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டை பண்ணுகிறான் என்றார்? என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து என்ன சொன் னார்கள்? ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18. அவர்களை இயேசு நோக்கி: யார் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்? சாத்தான்.
19. இயேசு உங்களுக்கு என்ன அதிகாரங்கொடுக்கிறேன் என்றார்? இதோ, சர்ப் பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமை யையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன். ஒன்றும் உங்களை என்ன செய்ய மாட்டாது? சேதப்படுத்தமாட்டாது.
20. ஆகிலும் நீங்கள் எதற்கு சந்தோஷப்படாமல் எதற்கு சந்தோஷப்படுங்கள் என்றார்? ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படா மல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்ப டுங்கள் என்றார்.
21. அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து சொன்னது என்ன? பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக் கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
22. சகலமும் யாரால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? என் பிதாவி னால். பிதா தவிர வேறொருவனும் யார் இன்னாரென்று அறியான்? குமாரன். குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கி றாரோ அவனுந்தவிர, வேறொருவனும் யார் இன்னாரென்று அறியான் என்றார்? பிதா.
23. பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி எவைகள் பாக்கியமுள்ளவைகள் என்றார்? நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24. அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காண வும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், எப்படிப் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? காணாமலும் கேளாமலும் போனார்கள்.
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும் படி: போதகரே, எதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்? நித்திய ஜீவனை.
26. அதற்கு இயேசு சொன்னது என்ன? நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியி ருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. நியாயசாஸ்திரி பிரதியுத்தரமாக சொன்னது என்ன? உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக் கிறது என்றான்.
28. இயேசு அவனை நோக்கி எப்படி உத்தரவு சொன்னாய் என்றார்? நிதானமாய் உத்தரவு சொன்னாய் என்றார். எப்பொழுது பிழைப்பாய் என்றார்? உன் தேவனா கிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத் தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரும் பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை யார் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்? நீதிமான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எங்கே போகை யில் கள்ளர் கையில் அகப்பட்டான்? எரிகோவுக்கு. அவர்கள் அவன் வஸ்திரங் களை உரிந்துகொண்டு, அவனை என்ன செய்தார்கள்? அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, என்ன செய்தான்? பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, என்ன செய்தான்? பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, என்ன செய்தான்? மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது என்ன செய்தான்? இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிக மாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்?
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.
38. பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் எங்கே பிரவேசித்தார்? ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே யார் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள்? மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ.
39. அவளுக்கு யார் இருந்தாள்? மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் என்ன செய்தாள்? இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40. மார்த்தாள் எதினால் வருத்தமடைந்தாள்? பற்பல வேலைகளைச் செய்வ தில் மிகவும் வருத்தமடைந்தாள். மார்த்தாள் இயேசுவிடத்தில் வந்து சொன் னது என்ன? ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ எவைகளைக்குறித்து கவலைப்பட்டுக் கலங்குகிறாய் என்றார்? அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் என்றார்.
42. தேவையானது ஒன்றே, மரியாள் எதைத் தெரிந்துகொண்டாள் என்றார்? தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.