லூக்கா – 14

Deal Score0
Deal Score0

லூக்கா – 14

1. ஒரு ஓய்வுநாளிலே யார் வீட்டிலே இயேசு போஜனம் பண்ணம்படிக்குப்  போயிருந்தார்? பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே.
2. அப்பொழுது யார் அவருக்கு முன்பாக இருந்தான்? நீர்க்கோவை வியாதி யுள்ள ஒரு மனுஷன். என்ன செய்வாரோவென்று யார் அவர்மேல் நோக்கமா யிருந்தார்கள்? ஜனங்கள்.
3. இயேசு யாரைப் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்? நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து.
4. அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, என்ன செய்தார்? சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டார். 
5. அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை என்ன செய்வான் என்றார்? உடனே தூக்கிவிடானோ என்றார். 
6. எதற்கு அவர்களால் கூடாமற்போயிற்று? அதற்கு உத்தரவுசொல்ல.
7. எதைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்? விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதை அவர் பார்த்து.
8. ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் எந்த இடத்தில் உட்காராதே? முதன்மையான இடத்தில். யார் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்? உன்னிலும் கனமுள்ளவன்.
9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து என்ன என்று சொல்லுவான்? இவருக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ என்ன செய்ய வேண்டியதாயிருக்கும்? வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், எந்த இடத்தில் உட்காரு? தாழ்ந்த இடத்தில். அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து என்ன என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்? சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும்.
11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் என்ன செய்யப்படுவான் என்றார்? தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் என்ன செய்யப்படுவான் என்றார்? உயர்த்தப்படுவான்.
12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, யாரை அழைக்கவேண்டாம் என்றார்? உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம் என்றார். அழைத்தால் அவர்களும் உன்னை என்ன செய்வார்கள்? அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு என்ன செய்ததாகும்? பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13. நீ விருந்துபண்ணும்போது யாரை அழைப்பாயாக? ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14. எப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்? நீ விருந்துபண்ணும்போது ஏழைக ளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைக்கும்போது. அவர்கள் உனக்கு என்ன செய்மாட்டார்கள்? பதில் செய்யமாட்டார்கள். எதில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்? நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்.
15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்ட பொழுது, அவரை நோக்கி: யார் பாக்கியவான் என்றான்? தேவனுடைய ராஜ்யத் தில் போஜனம்பண்ணுகிறவன்.
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, யாரை அழைப்பித்தான்? அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி என்ன சொல்லி அனுப் பினான்? நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கி றது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18. அவர்களெல்லாரும் என்ன சொல்லத் தொடங்கினார்கள்? போக்குச்சொல் லத் தொடங்கினார்கள். ஒருவன் என்ன சொன்னான்? ஒரு வயலைக்கொண் டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக் கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன் என்ன சொன்னான்? ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளு கிறேன் என்றான்.
20. வேறொருவன் என்ன சொன்னான்? பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21. அந்த ஊழியக்காரன் வந்து, என்ன செய்தான்? இவைகளைத் தன் எஜமானுக் குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்கா ரனை நோக்கி யாரை இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்? நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய் தாயிற்று, இன்னும் என்ன இருக்கிறது என்றான்? இடம்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி நீ எங்கே என் வீடு நிறையும் படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா என் றான்?  பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய்.
24. யார் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றான் என்று சொன்னார்? அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும்.
25. பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து யார் எனக்குச் சீஷனாயிருக்கமாட் டான் என்றார்? 
26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனை வியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவ னையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் யாராயி ருக்கமாட்டான்? எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28. உங்களில் ஒருவன் எதைக் கட்ட மனதாயிருந்தான்? ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்தான். 
29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கி றவர்களெல்லாரும்:
30. என்ன என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக்     கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ என்றார்? இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான் என்று சொல்லி.
31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிற போது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதி னாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட் கார்ந்து என்ன செய்யாதிருப்பானோ? ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, என்ன செய்வானே? ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவை களைக் கேட்டுக்கொள்வானே. 
33. அப்படியே உங்களில் எவனாகிலும் என்ன செய்யாவிட்டால் அவன் எனக் குச் சீஷனாயிருக்கமாட்டான்? தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத் துவிடாவிட்டால்.
34. எது நல்லதுதான்? உப்பு. எது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்ப டும்? உப்பு.
35. எது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது? உப்பு. எதை வெளியே கொட்டிப் போடுவார்கள்? உப்பை. கேட்கிறதற்குக் காதுள்ளவன் என்ன செய்யக் கடவன் என்றார்? கேட்கக்கடவன் என்றார்.


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo