லூக்கா – 15
1. யார் இயேசுவுடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந் தார்கள்? சகல ஆயக்காரரும் பாவிகளும்.
2. அப்பொழுது முறுமுறுத்தது யார்? பரிசேயரும் வேதபாரகரும். பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து சொன்னது என்ன? இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் எப்படிச் சொன்னார்? உவமையாக.
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைக ளில் எத்தனை காணாமல் போனால், மற்றவைகளை வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ என்றார்? ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்.
5. கண்டுபிடித்தபின்பு, அவன் அதை என்ன செய்வான்? சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள் என்பான்.
7. அதுபோல, யாரைக்குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் யாரைக்குறித்து பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற் றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம்.
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், என்ன செய்யாமலிருப்பாளோ? விளக் கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக் கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து என்ன செய்வாள்? காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டு பிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10. அதுபோல யாரிநிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷ முண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? மனந் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்.
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு எத்தனை இருந்தார்கள்? இரண்டு குமாரர்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி என்ன கேட்டான்? தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்கு என்ன செய்தான்? தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத் தான்.
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும்சேர்த்துக்கொண்டு, என்ன செய்தான்? தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, என்ன ஆயிற்று? அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, என்ன செய்தான்?
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனை என்ன செய்தான்? தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது அவன் எதற்கு ஆசையாயிருந்தான்? பன்றிகள் தின்கிற தவிட்டி னாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஆனால் என்ன ஆனது? ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்கு எது தெளிந்தது? புத்தி. அவன் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு என்ன இருக்கிறது? பூர்த்தி யான சாப்பாடு இருக்கிறது. நானோ எதினால் சாகிறேன்? புசியினால்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோத மாகவும் உமக்கு முன்பாகவும் என்ன செய்தேன்? பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் நான் யார் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல? உம் முடைய குமாரன். யாரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்? உம்முடைய கூலிக்கார ரில் ஒருவன். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு என்ன செய்தான்? மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21. குமாரன் தகப்பனை நோக்கி சொன்னது என்ன? தகப்பனே, பரத்துக்கு விரோ தமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்றுசொன்னான்.
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி சொன்னது என்ன? நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமா யிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25. அவனுடைய மூத்தகுமாரன் எங்கு இருந்தான்? வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, என்ன கேட்டான்? கீதவாத்தியத் தையும் நடனக்களிப்பையும் கேட்டான்.
26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து என்ன கேட்டான்? இதென்ன என்று விசாரித்தான்.
27. அதற்கு அவன் சொன்னது என்ன? உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியி னாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் என்ன செய்தான்? கோபமடைந்து, உள்ளே போக மன தில்லாதிருந்தான். தகப்பனோ என்ன செய்தான்? வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதி ருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு எதை கொடுக்கவில்லை? ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்க வில்லை.
30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே என்ன செய்தீரே என்றான்? கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம் யாருடையதாயிருக்கிறது? உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணா மற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் என்ன செய்ய வேண்டும் என்றார்? நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண் டுமே என்று சொன்னான் என்றார்.