யோவான் – 1
1. ஆதியிலே என்ன இருந்தது? வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை யாரிடத் தில் இருந்தது? தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை யாராய் இருந்தது? தேவனாய் இருந்தது.
2. அவர் ஆதியிலே யாரோடிருந்தார்? தேவனோடிருந்தார்.
3. சகலமும் யார் மூலமாய் உண்டாயிற்று? தேவன் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் யாராலேயல்லாமல் உண்டாகவில்லை? தேவனேயல் லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் என்ன இருந்தது? ஜீவன். அந்த ஜீவன் யாருக்கு ஒளியாயிருந் தது? மனுஷருக்கு.
5. அந்த ஒளி எதிலே பிரகாசிக்கிறது? இருளிலே. இருளானது எதைப் பற்றிக் கொள்ளவில்லை? ஒளியைப் பற்றிக்கொள்ளவில்லை.
6. யாரால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? தேவனால். அவன் பெயர் என்ன? யோவான்.
7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி எதைக் குறித்துச் சாட்சிகொ டுக்க வந்தான்? அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந் தான்.
8. அவன் எதையல்ல, எதைக்குறித்துச் சாட்சிக்கொடுக்க வந்தான்? அந்த ஒளி யல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9. யாரைப் பிரகாசிப்பிக்கிற ஒளி அந்த மெய்யான ஒளி? உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10. அவர் எதில் இருந்தார்? உலகத்தில் இருந்தார். எது அவர் மூலமாய் உண்டா யிற்று? உலகம். எது அவரை அறியவில்லை? உலகம்.
11. அவர் எதிலே வந்தார்? தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை என்ன செய்தார்கள்? அவரை ஏற்றுக்கொள்ள வில்லை.
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களுக்கும் தேவன் கொடுத்த அதிகாரம் என்ன? அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளா கும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
13. அவர்கள் எதினால் பிறவாதவர்கள்? அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாதவர்கள். அவர் கள் யாராலே பிறந்தவர்கள்? தேவனாலே பிறந்தவர்கள்.
14. அந்த வார்த்தை என்னவாகியது? மாம்சமாகியது. அந்த வார்த்தை மாம்ச மாகி எதினால் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்? கிருபையி னாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். எதைக் கண்டோம்? அவருடைய மகிமையைக் கண்டோம். அந்த மகிமை எதுக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது? அது பிதாவுக்கு ஒரேபேறானவரு டைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15. யோவான் அவரைக்குறித்துச் கொடுத்த சாட்சி என்ன? எனக்குப் பின்வருகிற வர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறி னான்.
16. எதினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்? அவரு டைய பரிபூரணத்தினால்.
17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் யார் மூலமாய்க் கொடுக்கப்பட்டது? மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் யார் மூல மாய் உண்டாயின? இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18. யாரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை? தேவனை. தேவனை யார் வெளிப்படுத்தினார்? பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19. எருசலேமிலிருந்து யூதர்கள் யாரை யோவானிடத்தில் அனுப்பினார்கள்? ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பினார்கள். அவர் கள் யோவானிடத்தில் என்ன கேட்டார்கள்? நீர் யார் என்று கேட்டார்கள்.
20. அவன் என்னவென்று அறிக்கையிட்டான்? அவன் மறுதலியாமல் அறிக்கை யிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21. அப்பொழுது அவர்கள் என்ன கேட்டார்கள்? பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு யோவான் சொன்னது என்ன? நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று யார் கேட்டார்கள்? ஆசாரியரும் லேவியரும். அதற்கும் யோவான் சொன்னது என்ன? அல்ல என்றான்.
22. அவர்கள் பின்னும் அவனை நோக்கி கேட்டது என்ன? நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23. அதற்கு யோவான் சொன்னது என்ன? அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ் வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத் திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24. அனுப்பப்பட்டவர்கள் யாராயிருந்தார்கள்? பரிசேயராயிருந்தார்கள்.
25. அவர்கள் அவனை நோக்கி நீர் யாரும் அல்லவென்றால் ஏன் ஞானஸ்நா னங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்? நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், என் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் எதினாலே ஞானஸ்நானங் கொடுக்கிறேன்? ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன். நீங்கள் அறி யாதிருக்கிற ஒருவர் எங்கே நிற்கிறார்? உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27. அவர் எனக்குப் பின்வந்தும் எப்படிப்பட்டவர்? என்னிலும் மேன்மையுள்ள வர். எதற்கு நான் பாத்திரனல்ல என்றான்? அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28. இவைகள் எங்கே நடந்தன? யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு சொன்னது என்ன? இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30. இயேசுவை யார் என்று யோவான் சொன்னான்? எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவ ரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான்.
31. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. இவர் யாருக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என் றான்? இஸ்ரவேலுக்கு.
32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: யார் புறாவைப்போல வானத் திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்? ஆவியானவர்.
33. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் என்னவென்று எனக் குச் சொல்லியிருந்தார்? ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34. அந்தப்படியே நான் கண்டு, இவரே யார் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்? தேவனுடைய குமாரன் என்று.
35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,
36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு சொன்னது என்ன? இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, என்ன செய்தார் கள்? இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு என்ன கேட்டார்? என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்குப் என்ன அர்த்த மாம்? போதகரே என்று அர்த்தமாம்.
39. இயேசு சொன்னது என்ன? வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, என்ன செய்தார்கள்? அன்றையத்தினம் அவரி டத்தில் தங்கினார்கள். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் யார்? சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு என்ன சொன் னான்? மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு என் னவென்று அர்த்தமாம்? கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42. பின்பு, யாரை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்? சீமோன். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ என்ன என் னப்படுவாய் என்றார்? நீ கேபா என்னப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு என்னவென்று அர்த்தமாம்? பேதுரு என்று அர்த்தமாம்.
43. மறுநாளிலே இயேசு எங்கு போக மனதாயிருந்தார்? கலிலேயாவுக்குப் போக. யாரைக் கண்டு நீ எனக்குப் பின்சென்றுவா என்றார்? பிலிப்புவைக் கண்டு.
44. பிலிப்பென்பவன் யார்? அந்திரோயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு சொன்னது என்ன? நியாயப்பிரமாணத் திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: எங்கிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்? நாசரேத்திலிருந்து. அதற்குப் பிலிப்பு என்ன சொன்னான்? வந்து பார் என்றான்.
47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து சொன்னது என்ன? இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48. அதற்கு நாத்தான்வேல் என்ன கேட்டான்? நீர் என்னை எப்படி அறிவீர் என் றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ எங்கே இருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்? அத்திமரத்தின் கீழிருக் கும்போது.
49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் யார் என்றான்? நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக என்ன என்று நான் உனக்குச் சொன்ன தினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்? அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன்.
51. பின்னும் அவர் அவனை நோக்கி எதை நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.