யோவான் – 3

Deal Score0
Deal Score0

யோவான் – 3
1. யாருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்? யூதருக்குள்ளே.
2. அவன் இராக்காலத்திலே யாரிடத்தில் வந்தான்? இயேசுவினிடத்தில். நிக்கொதேமு இயேசுவிடம், ரபீ, நீர் யார் என்று அறிந்திருக்கிறோம் என்றான்? தேவனிடத்திலிருந்து வந்த போதகர். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே யார் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்? தேவன்.
3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் என்ன செய்யாவிட்டால் தேவ னுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மறுபடியும் பிறவாவிட்டால். 
4. அதற்கு நிக்கொதேமு கேட்ட கேள்வி என்ன? ஒரு மனுஷன் முதிர்வயதாயி ருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்த ரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவா விட்டால் எதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்? தேவனுடைய ராஜ்யத்தில்.
6. மாமிசத்தினால் பிறப்பது எதுவாயிருக்கும்? மாம்சமாயிருக்கும்.  ஆவியி னால் பிறப்பது எதுவாயிருக்கும்? ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் எதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்? மறுபடியும் பிறக்கவேண் டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து.
8. காற்றானது எங்கே வீசுகிறது? தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. எதைக் கேட்கிறாய்? அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக் குத் தெரியாது; அப்படியே இருக்கிறவன் யார்? ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9. அதற்கு நிக்கொதேமு கேட்டது என்ன? இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: நீ யாராயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கி றாயா? இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்.
11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந் திருக்கிறதைச் சொல்லி, எதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்? நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம். நீங்களோ எதை ஏற்றுக்கொள்ளு கிறதில்லை? எங்கள் சாட்சியை.
12. எந்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்க வில்லையே? பூமிக்கடுத்த காரியங்களை. எந்த காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரமகாரியங்களை.
13. யாரையல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை? பரலோ கத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல் . 
14. எது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது? சர்ப்பம். அதைப் போல யார் உயர்த்தப்பட வேண்டும்? மனுஷகுமாரன்.
15. மனுஷகுமாரன் ஏன் உயர்த்தப்பட வேண்டும்? தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த் தப்பட வேண்டும்.
16. தேவன், யார் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்.
17. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பவில்லை? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினார்? அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற் காகவே அவரை அனுப்பினார்.
18. யாரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்? இயேசு கிறிஸ்துவை. விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனு டைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் எதற்கு உட் பட்டாயிற்று? ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது எது? ஒளியானது உல கத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக் கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 
20. யார் ஒளியைப் பகைக்கிறான்? பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். அவன் ஏன் ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்? தன் கிரியை கள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. யார் ஒளியினிடத்தில் வருகிறான்? சத்தியத்தின்படி செய்கிறவன். அவன் ஏன் ஒளியினிடத்தில் வருகிறான்? தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய் யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.
22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் எங்கு வந்தார்கள்?  யூதேயா தேசத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, எந்ந செய்தார்? ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
23. எந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தது? சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே. அந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்த படியினால், யார் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்? யோவான். ஜனங்கள் யாரிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்? யோவானிடத்தில்.
24. அக்காலத்தில் யோவான் எதில் வைக்கப்பட்டிருக்கவில்லை? காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் என்ன  உண் டாயிற்று? வாக்குவாதம். எதைக்குறித்து? சுத்திகரிப்பைக்குறித்து. 
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து சொன்னது என்ன? ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27. யோவான் பிரதியுத்தரமாக: எங்கிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டா லொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்? பரலோகத்திலி ருந்து. 
28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே யார்? சாட்சிகள். 
29. மணவாளன் யார்? மணவாட்டியை உடையவனே மணவாளன். மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, என்ன செய்கிறவனாய் இருக்கிறான்? அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். எது இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று? இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமா யிற்று.
30. அவர் என்ன செய்யப்பட வேண்டும்? பெருக வேண்டும். நான் என்ன செய்யப் பட வேண்டும்? சிறுக வேண்டும்.
31. எங்கிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்? உன்னதத்திலிருந்து வருகிறவர். எதிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்? பூமியிலிருந்துண்டானவன். பரலோ கத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் எப்படிப்பட்டவர்? மேலானவர்.
32. தாம் எதைச் சாட்சியாகச் சொல்லுகிறார்? கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். அவருடைய சாட்சியை யார் ஏற்றுக்கொள்ளுகிற தில்லை? ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னவென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்? தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34. யார் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்? தேவனால் அனுப்பப்பட்ட வர். தேவன் அவருக்கு எதை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்? தமது ஆவியை. 
35. யார் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார்? பிதா.

36. யார் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்? குமாரனிடத்தில் விசுவா சமாயிருக்கிறவன். யார் ஜீவனைக் காண்பதில்லை? குமாரனை விசுவாசியாத வன்.  தேவனுடைய கோபம் யார்மேல் நிலைநிற்கும்? குமாரனை விசுவாசியா தவன் மேல்.


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo