லூக்கா – 12
1. அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் எப்படி கூடிவந்திருந்தார்கள்? ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருந்தார்கள். இயேசு முதலா வது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் யாரைக்குறித்து எச்சரிக்கையாயி ருங்கள் என்றார்? மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து.
2. வெளியாக்கப்படாத எதுவுமில்லை? மறைபொருளுமில்லை. அறியப்படாத எதுவுமில்லை? இரகசியமுமில்லை.
3. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது எதிலே கேட்கப்படும்? வெளிச்சத்திலே. நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது எதின் மேல் கூறப்படும்? வீடுகளின்மேல்.
4. யாராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்? என்சிநேகிதராகிய உங்களுக்கு. யாருக்குப் பயப்படாதிருங்கள்? சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிக மாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
5. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கி றேன்: யாருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? கொலை செய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள்.
6. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்? ஐந்து. அவைகளில் ஒன்றாகிலும் யாரால் மறக்கப்படுகிறதில்லை? தேவனால் மறக்கப்படுவதில்லை.
7. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் என்ன செய்யப்பட்டிருக்கிறது? எண் ணப்பட்டிருக்கிறது. ஆகையால் என்ன செய்யாதிருங்கள்? பயப்படாதிருங்கள், எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? அநேகம் அடைக்கலான் குருவிக ளைப்பார்க்கிலும்.
8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: யாரை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்? மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை.
9. யார் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன்.
10. யாருக்கு அது அவனுக்கு மன்னிக்கப்படும்? எவனாகிலும் மனுஷகுமார னுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது. யாருக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை? பரிசுத்தஆவிக்கு விரோதமாய்.
11. அன்றியும், யாருக்கு முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள்? ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக.
12. நீங்கள் பேசவேண்டியவைகiளா யார் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப் பார் என்றார்? பரிசுத்த ஆவியானவர்.
13. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என்ன வென்று என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண் டான்? ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி.
14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை யாராக வைத்தவன் யார் என்றார்? உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன்.
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? பொருளாசையைக்குறித்து. ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திர ளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல என்றார்? ஜீவன் அல்ல.
16. அல்லாமலும், எதை அவர்களுக்குச் சொன்னார்? ஒரு உவமையை. யாரு டைய நிலம் நன்றாய் விளைந்தது? ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம்.
17. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? எதைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே? என் தானியங்களை.
18. நான் ஒன்று செய்வேன், எவைகளை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைப்பேன்? என் களஞ்சியங்களை.
19. பின்பு: யாருக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது? ஆத்துமாவுக்காக. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று யாரோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்? என் ஆத்துமாவோடே.
20. தேவனோ அவனை நோக்கி: எப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதா கும் என்றார்? மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரி யிலே எடுத்துக் கொள்ளப்படும்பொழுது.
21. யார் இப்படியே இருக்கிறான் என்றார்? தேவனிடத்தில் ஐசுவரியவானாயிரா மல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்.
22. பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், எதற்காகக் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.
23. ஆகாரத்தைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? ஜீவன். உடையைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? சரீரம்.
24. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் என்ன செய்கிறதில்லை? விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டசாலையு மில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் யார் பிழைப்பூட்டுகிறார்? தேவன். எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? பறவைகளைப்பார்க்கிலும்.
25. எதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழுத்தைக் கூட்டு வான்? கவலைப்படுகிறதினால்.
26. எதுமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? மிகவும் அற்பமான காரியமுதலாய்.
27. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவை கள் என்ன செய்கிறதில்லை? உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என் றாலும் யார் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? சாலொமோன்.
28. இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, எதுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்து வித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு.
29. ஆகையால், என்ன என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங் கள்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று.
30. இவைகளையெல்லாம் யார் நாடித் தேடுகிறார்கள்? உலகத்தார். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று யார் அறிந்திருக்கிறார்? உங்கள் பிதாவா னவர்.
31. எதையே தேடுங்கள்? தேவனுடைய ராஜ்யத்தையே. அப்பொழுது இவைக ளெல்லாம் உங்களுக்கு என்ன செய்யப்படும்? கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு எதைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்? ராஜ்யத்தை.
33. உங்களுக்கு உள்ளவைகளை என்ன செய்யுங்கள்? விற்றுப்பிச்சை கொடுங் கள். எதைப் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்? பழமை யாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும். அங்கே யார் அணுகுகிறதுமில்லை? திருடன். எது கெடுக்கிறதுமில்லை? பூச்சி.
34. எங்கே உங்கள் இருதயமும் இருக்கும்? உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கி றதோ அங்கே.
35. உங்கள் அரைகள் எப்படி இருக்க வேண்டும்? கட்டப்பட்டதாக இருக்க வேண் டும். உங்கள் விளக்குகள் எப்படி இருக்க வேண்டும்? எரிகிறதாக இருக்க வேண் டும்.
36. யாருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷ ருக்கு ஒப்பாகவும் இருங்கள்? தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருங்கள்.
37. எப்படிப்பட்ட ஊழியக்காரரே பாக்கியவான்கள்? எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் எப்படி அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன்? அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச் செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்.
38. எப்படி இருக்கிற ஊழியக்காரர் பாக்கியவான்கள்? அவர் இரண்டாம் ஜாமத்தி லாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே விழித்திருக்கக் கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று யாருக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக் கிறீர்கள்? வீட்டெஜமானுக்கு.
40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் யார் வருவார்? மனுஷகுமாரன். ஆகையால் நீங்களும் எப்படியிருங்கள் என்றார்? ஆயத்தமாயிருங்கள்என்றார்.
41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி என்னவென்று கேட்டான்?ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42. அதற்குக் கர்த்தர்: யாருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமு முள்ள விசாரணைக்காரன் யாவன்? பணிவிடைக்காரருக்கு.
43. யார் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்கா ரன் பாக்கியவான்? எஜமான்.
44. எதின்மேல் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும்.
45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்றுதனக்குள்ளே சொல்லிக்கொண்டு, என்ன செய்யத் தலைப்பட்டால்? வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப் பட்டால்.
46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனு டைய எஜமான் வந்து, அவனுக்கு என்ன செய்வான்? அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47. எப்படி இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்? தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன்.
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, என்ன செய்யப்படுவான்? சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்? எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். மனுஷர் எவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்? மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. பூமியின்மேல் எதைப்போட வந்தேன்? அக்கினியைப் போடவந்தேன். அது இப்பொழுதே என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்? பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் என்ன உண்டு? நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. அது முடியுமளவும் என்ன செய்யப்படுகிறேன்? எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே எதை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமா தானத்தை. சமாதானத்தையல்ல, எதை உண்டாக்கவந்தேன் என்று உங்களுக் குச் சொல்லுகிறேன்? பிரிவினையையே.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? ஐந்துபேர். இரண்டுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? மூன்றுபேர். மூன்றுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? இரண்டுபேர்.
53. தகப்பன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? மகன். மகன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? தகப்பன். தாய் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மகள். மகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? தாய். மாமி யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மருமகள். மருமகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மாமி.
54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே எதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்? மேகம் எழும்பு கிறதை.
55. எதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர் கள், அந்தப்படியுமாகும்? தென்றல் அடிக்கிறதை.
56. மாயக்காரரே, எதை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே? பூமியின் தோற் றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க. எதை நிதானியாமற் போகிறதென்ன? இந்தக் காலத்தையோ.
57. எது இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? நியாயம்.
58. உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோ கிறபோது, என்ன செய்? வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையா கும்படி பிரயாசப்படு. இல்லாவிட்டால், அவன் உன்னை என்ன செய்வான்? நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான். நியாயாதிபதி உன்னை யாரி டத்தில் ஒப்புக்கொடுப்பான்? சேவகனிடத்தில். சேவகன் உன்னை என்ன செய் வான்? சிறைச்சாலையில் போடுவான்.
59. நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், என்ன செய்ய மாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? அவ்விடத்திலிருந்து புறப்பட மாட்டாய்.