லூக்கா – 13

Deal Score0
Deal Score0

லூக்கா – 13
1. யார் சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந் திருந்தான்? பிலாத்து. அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை யாருக்கு அறிவித்தார்கள்? இயேசுவுக்கு.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? அந்தக் கலிலேய ருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவார்கள்? அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனைபேரைக் கொன்றது? பதினெட்டுப் பேரைக் கொன்றது. எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர் கள் யாராயிருந்தார்கள் என்று நினைக்கிறீர்களோ? குற்றவாளிகளாயிருந்தார் கள் என்று.
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவீர்கள் என்றார்? அப்படியே கெட்டுப்போவீர் கள் என்றார்.
6. அப்பொழுது அவர் என்ன சொன்னார்? ஒரு உவமையையும் சொன்னார். ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் எதை நட்டிருந்தான்? ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது என்ன கண்டான்? ஒன்றுங் காணவில்லை. 
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, எத்தனை வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்? மூன்று வருஷமாய். எதை காணவில்லை? ஒன்றையுங் காணவில்லை. இதை என்ன செய்? வெட்டிப் போடு. இது எதையும் ஏன் கெடுக்கிறது என்றான்? நிலத்தையும்.
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் என்ன செய் வேன் என்றான்? இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்.
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை என்ன செய்யலாம் என்று சொன்னான் என்றார்? வெட்டிப்போடலாம்.
10. ஒரு ஓய்வுநாளில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது யார் அங்கேயிருந்தாள்? பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்ப டுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ. அவள் எப்படிப்பட்டவளாய் இருந் தாள்? எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து என்ன சொன்னார்? ஸ்தி ரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொன்னார்.
13. அவள்மேல் எதை வைத்தார்? தமது கைகளை. உடனே அவள் என்ன செய் தாள்? நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14. ஏன் ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான்? இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால். ஜெப ஆலயத்தலைவன் ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்ய லாகாது என்றான்.
15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலி ருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், என்ன செய்கிறதில்லையா? அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 
16. யாரை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில் லையா என்றார்? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை.
17. அவர் அப்படிச் சொன்னபோது, யார் வெட்கப்பட்டார்கள்? அவரை விரோதித் திருந்த அனைவரும். ஜனங்களெல்லாரும் எதைக்குறித்து சந்தோஷப்பட்டார் கள்? அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?

19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து என்னவாயிற்று? பெரிய மரமா யிற்று. எவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்? ஆகாயத்துப் பறவைகள்.

20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?

21. அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவ தும் புளிக்கும்வரைக்கும் எதிலே அடக்கிவைத்தாள் என்றார்? மூன்றுபடிமா விலே.
22. அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் என்ன செய்துகொண்டு போனார்? உபதேசம் பண்ணிக்கொண்டு.
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யார் சிலபேர்தானோ என்று கேட்டான்? இரட்சிக்கப்படுகிறவர்கள். அதற்கு அவர்:
24. எதின்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்? இடுக்கமான வாசல் வழியாய். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் என்ன ஆகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அவர்களாலே கூடாமற்போகும்.
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று என்ன செய்வீர்கள்? ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டு மென்று சொல்லிக் கதவைத் தட்டுவீர்கள். அப்போது அவர் பிரதியுத்தரமாக சொல்லுவது என்ன? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26. அப்பொழுது நீங்கள் என்ன என்று சொல்லுவீர்கள்? உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27. ஆனாலும் அவர் என்ன என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
28. நீங்கள் யாரைக் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்? ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய  ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்க ளையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது.
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, எதில் பந்தியிருப்பார்கள்? தேவனுடைய ராஜ்யத்தில்.
30. அப்பொழுது முந்தினோர் யாராவார்கள் என்றார்? பிந்தினோராவார்கள். பிந்தினோர் யாராவார்கள் என்றார்? முந்தினோராவார்கள்.
31. அந்த நாளிலே சில பரிசேயர் இயேசுவிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டு என்ன செய்யும்? போய்விடும். யார் உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்? ஏரோது.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் என்ன செய்து மூன்றாம் நாளில் நிறைவடைவேன்? பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நடமாடவேண்டும். எங்கே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை? எருசலேமுக்குப் புறம்பே. என்று நான் சொன்னதாக நீங்கள் போய் யாருக்குச் சொல்லுங்கள்? அந்த நரிக்கு.
34. எருசலேமே, எருசலேமே, யாரைக் கொலைசெய்கிறவளே? தீர்க்கதரிசி களை. யாரைக் கல்லெறிகிறவளே? உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை. எந்தவண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த் துக்கொள்ள மனதாயிருந்தேன்? கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக. உங்களுக்கோ என்ன இல்லா மற்போயிற்று? மனதில்லாமற்போயிற்று.
35. இதோ, எது உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்? உங்கள் வீடு. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் யார் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்? ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo