லூக்கா – 16
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: யாருக்கு ஒரு உக்கிராணக் காரன் இருந்தான்? ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு. என்ன என்று எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது? அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ யாராயிருக்கக் கூடாது என்றான்? உக்கிராணக்காரனாயிருக்கக் கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் எதிலி ருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே? உக்கிராண விசாரிப்பிலிருந்து. எதுக்கு எனக்குப் பெலனில்லை? கொத்துகிறதற்கு. எதுக்கு வெட்கப்படுகிறேன்? இரக்க வும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்ன என்று எனக் குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்? என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று.
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி கேட்டது என்ன? நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன் சொன்னது என்ன? நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, என்ன என்று சீக்கிரமாய் எழுது என்றான்? ஐம்பது.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி கேட்டது என்ன? நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன் சொன்னது என்ன? நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, என்ன என்று எழுது என்றான்? எண்பது.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் எப்படிச் செய்தான் என்று எஜமான் கண்டான்? புத்தியாய்ச் செய்தான். அவனை என்ன செய்தான்? மெச்சிக்கொண்டான். இவ் விதமாய் யாரைப் பார்க்கிலும் யார் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயி ருக்கிறார்கள்? ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, எதினாலே உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்? அநீதியான உலகப்பொருளால்.
10. யார் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே உண்மையுள்ளவன். யார் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே அநீதியுள்ளவன்.
11. எதைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்க ளிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? அநீதியான உலகப்பொரு ளைப்பற்றி.
12. யாருடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? வேறொருவனு டைய காரியத்தில்.
13. யார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது? எந்த ஊழியக்கார னும். ஒருவனைப் பகைத்து மற்றவனை என்ன செய்வான்? சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை என்ன செய்வான்?அசட் டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய யாராலே கூடாது என்றார்? உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய யாரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்? பரிசேயரும்.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை யாராகக் காட்டுகிறீர்கள்? நீதிமான்களாக. தேவனோ எதை அறிந்திருக்கிறார்? உங்கள் இருதயங்களை. மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக எப்படிப்பட்டதாயிருக்கிறது? அருவருப்பாயிருக்கிறது.
16. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யார் வரைக்கும் வழங்கிவந்தது? யோவான்வரைக்கும். அதுமுதல் எது சுவிசேஷமாய் அறிவிக் கப்பட்டு வருகிறது? தேவனுடைய ராஜ்யம். யாவரும் எப்படி அதில் பிரவேசிக் கிறார்கள்? பலவந்தமாய்.
17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், எது ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்? வானமும் பூமியும்.
18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிற வன் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான். புருஷனாலே தள்ளப்பட்ட வளை விவாகம்பண்ணுகிறவனும் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான்.
19. எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன். அவன் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தான்? இரத்தாம்பரமும் விலையேறப் பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந் தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட யாரும் இருந்தான்? ஒரு தரித்திரனும் இருந் தான். அவன் எது நிறைந்தவனாய், எங்கே கிடந்தான்? பருக்கள் நிறைந்தவ னாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான்.
21. லாசரு எதினாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்? அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே. எவைகள் வந்து அவன் பருக் களை நக்கிற்று? நாய்கள்.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, எங்கே கொண்டுபோய் விடப்பட்டான்? தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே. ஐசுவரியவானும் மரித்து என்ன ஆனான்? அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே யாரைக் கண்டான்? ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவை யும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, யார் தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்? லாசரு. எதில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்? இந்த அக்கினிஜுவாலையில்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் எதை அனுபவித்தாய்? உன் நன்மைகளை. லாசருவும் அப்படியே எதை அநுப வித்தான்? தீமைகளை. அதை என்ன செய்? நினைத்துக்கொள். இப்பொழுது அவன் என்ன செய்யப்படுகிறான்? தேற்றப்படுகிறான். நீயோ என்ன செய்கி றாய்? வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோக வும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்க ளுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே என்ன உண்டாக்கப் பட்டிருக்கிறது என்றான்? பெரும்பிளப்பு.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு எத்தனை சகோதர ருண்டு? ஐந்துபேர். அவர்களும் எங்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள் ளுகிறேன் என்றான்? வேதனையுள்ள இந்த இடத்துக்கு.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு யார் உண்டு? மோசேயும் தீர்க்க தரிசிகளும். அவர்களுக்கு அவர்கள் என்ன செய்யட்டும் என்றான்? செவி கொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, எங்கிருந்து ஒரு வன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்? மரித்தோ ரிலிருந்து.
31. அதற்கு அவன்: அவர்கள் யாருக்கு செவிகொடாவிட்டால், மரித்தோரிலி ருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்? மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும்.