லூக்கா – 18
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள். அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்? மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதை யளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எது வரை எனக்கு ஊழியஞ்செய் என்பான்? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும். அதற்குப் பின் என்ன என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? நீ புசித்துக் குடிக்கலாம் என்று.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு என்ன செய்வானோ? உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்வானா? செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நீங்கள் என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நாங்கள் அப்பிர யோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் எந்த நாடு களின் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? பத்துப்பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன என்று சொன்னார்? நீங்கள் போய், ஆசாரி யர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகை யில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான்? ஒருவன். அவன் யாராயிருந்தான்? சமாரியனாயிருந்தான்.
17. அப்பொழுது இயேசு என்ன கேட்டார்? சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, யாரை ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? இந்த அந்நியனே ஒழிய.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் எப்படி வராது? பிரத்தியட்சமாய்.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனா லும் எதைக் காணமாட்டீர்கள்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை.
23. என்ன என்றும் சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். நீங்களோ என்ன செய்யாமல் இருங்கள்? போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின் னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல.
25. அதற்கு முன்பு அவர் எப்படி தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது? அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. எதுவரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத் தார்கள்? நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும். ஜலப்பிரளயம் வந்து என்ன செய்தது? எல்லாரையும் அழித்துப்போட்டது.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யக்கடவன்? பின்னிட்டுத் திரும்பா மலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. யார் ஜீவனை இழந்துபோவான்? தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிற வன். யார் தன் ஜீவனை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்? தன் ஜீவனை இழந்து போகிறவன்.
34. அந்த இராத்திரியில் என்ன செய்துகொண்டிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்? ஒரே படுக்கையில் படுத்திருக்கிற.
35. என்ன செய்கின்ற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்? திரிகை திரிக்கிற.
36. எங்கிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வயலிலி ருக்கிற.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எங்கே, ஆண்ட வரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகு வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.