Iravil Thookam Tholaithenae – இரவில் தூக்கம் தொலைத்தேனே
Shop Now: Bible, songs & etc
Iravil Thookam Tholaithenae – இரவில் தூக்கம் தொலைத்தேனே
இரவில் தூக்கம் தொலைத்தேனே
பாரம் என்னை சூழ்ந்ததே
கண்ணீரால் மெத்தை நனைந்ததே
என் பாரம் நீங்க நீர் வேண்டுமே -2
இயேசுவே நீர் வாருமே
என் கண்ணீரைப் போக்க நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே
என் சூழ்நிலைகளை மாற்றுமே
வீண் பழிகள் ஒருபுறம்
அவமானம் மறுபுறம்
துரோகத்தால் கலங்கினேன்
நம்பிக்கையால் உடைக்கப்பட்டேன்
( என் வேதனை சொல்லிவிட முடியாதது
என் பாரங்கள் அளவிட முடியாதது ) – 2
( இயேசுவே நீர் வாருமே )