ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae Ennae Un Amaithi Ayarnthae Niththirai Seikaiyil Oornthidum Vaan Velli Tamil Christmas Song Lyrics.
Oh Bethlehame Sitturae Christian Song Lyrics in Tamil
1. ஓ பெத்லகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.
2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே,
பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்
3. அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்
4. வேண்ட நற் சிறு பாலரும்
இத் தூய பாலனை
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.
5. பெத்லெகேம் தூய பாலனே
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழாதன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.
Oh Bethlehame Sitturae Christian Song Lyrics in English
1.Oh Bethlehame Sitturae
Ennae Un Amaithi
Ayarnthae Niththirai Seikaiyil
Oornthidum Vaan Velli
Vin Vaazhvin Jothi Thontritre
Un Veethil Intrae
Nalloor Naattam Pollor Koattam
Un Paalan Yeasuvae
2.Koorum Oh Vidi Vellikaal
Immaninthan Janmamae
Vin Veandharkku Magimaiyae
Paaril Amaithiyaam
Maa Thivviya Paalan Thontrinaar
Man Maanthar Thookkaththil
Viliththirukka Thootharum
Anboodu Vaanaththil
3.Amaithiyaai Amaithiyaai
Vin Eevu Thontrinaar
Maantharkku Swami Aasiyum
Amaithiyaai Eevaar
Kealathae Avar Varugai
Ippaava Logaththil
Mei Bakthar Yearppaar Swamiyai
Tham Sontha Aanmaavil
4.Veanda Nar Siru Paalarum
Iththooya Paalanai
Alaikka Yealai Maantharum
Ekkanni Mainthanai
Viswaasamum Nam Paasamum
Varavai Paarkkavae
Raavai Neekki Thontruvaar
Emmaatchi Paalanae
5.Bethleham Thooya Paalanae
Erangi Varuveer
Janippeer Engalil Intrum
Em Paavam Neekkuveer
Narseithi Evvilathannil
Isaippaar Thoothare
Aa Vaarum Vanthu Thangidum
Emmaanuvealarae
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Christmas song ‘ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae’ in Tamil.
- It includes multiple stanzas expressing themes of peace, divinity, and the birth of Jesus.
- The lyrics highlight the importance of belief and the call for salvation during the Christmas season.


