யேசுவே திருச்சபை ஆலயத்தின் – Yesuvae Thirusabai Aalayaththin Tamil Christian song lyrics
பல்லவி
யேசுவே திருச்சபை ஆலயத்தின்
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.
அனுபல்லவி
பேசற் கரிய மூலைக்ககல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல். – யேசுவே
சரணங்கள்
1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
அவமதித்திட்ட இந்த கல்;
வாகாய் ஆலய மூலைக் கமைந்து
வடிவாய்த் தலைக்கல்லான கல். – யேசுவே
2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
அதிசயமான அன்பின் கல்;
ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். – யேசுவே
3. ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
உன்னத விலைபெற்ற கல்;
எப்போதும் பரஞ்சோதியாய் நீதி
இலங்கும் சூரியனான கல். – யேசுவே
4. காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
கடிய மாபலமான கல்;
மாற்றிக் கலியை ஆற்றுத் துயரைத்
தேற்றி சபையைக் காக்குங் கல். – யேசுவே
5. என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை,
எழிலுறவே இக் கல்லின்மேல்;
நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
நாணம் அடையாள மெய்தானே. – யேசுவே
இயேசுவே திருச்சபை ஆலயத்தின் lyrics, Yesuvae Thirusabai Aalayaththin lyrics, Tamil songs, Yesuvae Thirusabai Aalayam lyrics
Yesuvae Thirusabai Aalayaththin song lyrics in english
Yesuvae Thirusabai Aalayaththin
Entrum Nilaikkum Moolaikkal
Peasar kariya Moolaikkai Avar
Perum Maaligaiyai Thaangum Kal
1.Aagathithentru Veedu Kattuvoar
Avamathithitta Intha Kal
Vakaai Aalaya Moolai kamainthu
Vadivaai Thalaikallaana Kal
2.Aalayamellam Isaivaai Inaikkum
Athisayamana Anbin Kal
Gnalaththu Pala Jaathigal Thamai
Natpura Ontraai Searkkum Kal
3.Oppilla Arum Maatchimaiyurum
Unnatha vilaipettra kal
Eppothum Paranjothiyaai Neethi
Elangum Sooriyanana Kal
4.Kattrukkum Kana Malaikkum Asaiya
Kadiya Maapalamaana Kal
Maattri Kaliyai Aattru Thuyarai
Theattri Sabaiyai Kaakkum Kal
5.Entrum Kattuvom Intha Aalayaththai
Ezhiluravae Ekkallinmael
Nantraai Ekkallil Nambikkai Vaipoan
Naanam Adaiyala Meithanae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘யேசுவே திருச்சபை ஆலயத்தின் – Yesuvae Thirusabai Aalayaththin’.
- It includes verses praising Jesus as the cornerstone of the church.
- The song emphasizes unity, strength, and faith in Jesus.
- It offers links to other related song lyrics for additional context and exploration.
- The English translation of the lyrics highlights the same themes of faith and church.
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
In hope of eternal life, which God, that cannot lie, promised before the world began;
தீத்து : Titus:1:2


