இத்தனை பெருங் குருசை ஐயா – Iththanai Perum Kurusai Aiyya Tamil Christian Gnana Keerthanainal song lyrics
பல்லவி
இத்தனை பெருங் குருசை ஐயா, நீர்
எடுத்தெப்படி நடப்பீர் துய்யா!
அனுபல்லவி
இத்தரையோர் வினையறச் சத்தமற்ற ஆடதுபோல்
இடறி தாளுந் தத்தளித்து வீழ்ந்திட
எழுந்து பதறியே சடலம் சோர்ந்திட
சரணங்கள்
1. பாதையினிற் கூட்டம் அடர்ந்திடவும்,
கொடியோர் நடத்திவரவும்,
நல்மாதரான சிலர் நாடிப் புலம்பிடவும்
நயமதாகிய தோள்கள் சிவக்கவும்,
நாதா,உமக்குப்பின் சீமோன் சுமக்கவும்,
2.வானா சனத்தினிலே மாறாத நன்மைகளை
மாந்தர் அனுபவித்திட,
ஞானாகரனே, உந்தன் நற்றாள் கரத்தினிலே
நைய ஆணியினா லிறுக்கவும்,
மெய்யில் பாரமாய்ச் சுமையொறுக்கவும்,
3.ஆவியொடுங்கிடவும், அவயவம் நடுங்கிடவும்,
அருள்முகம் வாடிடவும்,
பாவிகளைத் தமது ‘பாரிசமாக்கிடவும்,
பாடுபட வந்த இரக்கவாசனே,
பரமநாதனின் அருமைச்சேயனே,
Iththanai Perum Kurusai Aiyya song lyrics in English
Iththanai Perum Kurusai Aiyya Neer
Eduththeppadi Nadappeer Thiyaa
Iththaraiyoar Vinaiyura Saththamattra Aadathupoal
Idari Thaalum Thaththalithu Veelnthida
Eluntha Pathariyae Sadalam Sornthida
1.Paathaiyinir Koottam Adarnthidavum
Kodiyoar Nadathivaravum
Nalmaatharaana Silar Naadi Pulambidavum
Nayamathaagiya Tholgal Sivakkavum
Naathaa Umakkupin Seemon Sumakkavum
2.Vaanaa Sanaththinilae Maaraatha Nanmaigalai
Maanthar Anubaviththida
Ganakaaranae Unthan Nattraal Karathinilae
Naiya Aaniyinaal Irukkavum
Meiyil Paaramaai Sumaiyorukkavum
3.Aaviyodunkidavum Avayavam Nadaunkidavum
Arul Mugal Vaadidavum
Paavikalai Thamathu Paarisamaakkidavum
Paadupada Vantha Erakkavaasanae
Paramanaathanin Arumaiseayanae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இத்தனை பெருங் குருசை ஐயா – Iththanai Perum Kurusai Aiyya’.
- The lyrics convey deep spiritual meanings and themes of faith and devotion.
- It includes sections like Pallavi, Anupallavi, and several verses, highlighting different spiritual aspects.
- The English translation of the lyrics provides insights into the song’s messages.
Estimated reading time: 2 minutes


