அல்லேலூயா ஆ மாந்தரே – Alleluya Aa Maantharae Tamil Christian Easter song lyrics
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!
2.அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.
3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;
வெண் ஆடை தூதன் செல்லுவான்;
நாதர் கலிலேயா செல்வார்,
4.பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம் உமக்கே!
5.உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.
6.வா, தோமா, என் விலாவைப் பார்;
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.
7.தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.
8.காணாமல் நம்பின பாக்கியர்;
மாறா விஷ்வாசம் வைப்பவர்
அமர வாழ்வு பெறுவர்.
9.மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் தோத்ரம் படைப்போம்;
பரனைப்போற்றி மகிழ்வோம், அல்லேலூயா!
அல்லேலூயா ஆ மாந்தரே lyrics, Alleluya Aa Maantharae lyrics, Tamil songs
Alleluya Aa Maantharae song lyrics in english
1.Alleluya Alleluya Alleluya
Aa Maantharae Naam Paaduvom
Innaalil Saavai Ventroraam
Vin Maatchi Veandar Pottruvom
Alleluya
2.An Gnayiru Athikaalai
Nal Maathar Moovar Kallarai
Sentraare Kaana Thegaththai
3.Ammoovar Paarththaar Thoothan Thaan
Ven Aadai Thoothan Selluvaan
Naathar Galileaya Selvaar
4.Payantha Sheeshar Raavilae
Kandaar Keattaar Tham Naatharae
En Samaathaanam Umakkae
5.Uyirththa Naathar Kandomae
Entrorai Thoomaa Keattaanae
Nambaan Santhenkondaanae
6.Vaa Thoomaa En Vilaavai Paar
Itho En kaigal Kaalgal Paar
Nambu Santhegam Theer Enbaar
7.Thoomaa Santhegam Theernthanan
Vilaa Kai Kaalgal Nokkinan
En Naatha Swami Entranan
8.Kaanaamal Nambina Bakkiyar
Maaraa Vishvaasam Vaippavar
Amara Vaaluv Peruvar
9.Maa Thoyathaam Innaalil Naam
Nam Paadal Thothram Padaippom
Paranaipottri Magilvom
Alleluya
Table of contents
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Easter song ‘Alleluya Aa Maantharae’.
- It celebrates the victory over death and the resurrection of Jesus.
- The song includes themes of faith, doubt, and the joy of believing without seeing.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Overall, it emphasizes worship and praise during Easter celebrations.


