அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Tamil christian Keerthanaigal Paamalai song lyrics
1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,
துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,
பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,
இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.
2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன்,
பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன்,
எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன்,
முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.
3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,
ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,
சாவையழித்தமாவீரன், தாரணியோர்க்குபகாரன்,
தேவ சுரரேத்துந்தீரன், சோதி திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.
4. ஆதியும் அந்தமுமான, அல்பா ஒமேகாவுமான,
நீதி இரக்கமுமான, நித்திய ஜீவனுமான,
ஓதிய வேதமுமான, உத்தம மார்க்கமுமான,
மேதினியிலுருவான மீட்பர் திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.
அன்பர்க்கருள் புரிவோனை song lyrics, Anbarukarul Purivonai song lyrics, Tamil songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the song ‘அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai’ which consists of multiple verses praising a divine figure.
- Each verse highlights the qualities of the figure, such as the ability to alleviate suffering and grant wisdom.
- The song emphasizes spiritual themes and portrays the divine as a source of light and life.
- The lyrics celebrate the divine figure’s guidance, compassion, and eternal nature.


