என்னோ பல நினைவாலும் – Enno Pala Ninaivaalum Tamil Christian song lyrics
பல்லவி
என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.
அனுபல்லவி
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே. – என்
சரணங்கள்
1.அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ? – என்
2.மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே – என்
3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய். – என்
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக்
கண்டேன் தேசம் எங்கும்
சுற்றிப் பார்த்தும் – தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும்
பொய்யாமோ? – என்
5.தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் – அதை
ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென்ன
நினைக்கு? – என்
6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப்
பார்க்கிலும் தேவை நினக்
கொன்றும் இல்லையே. – என்
என்னோ பல நினைவாலும் lyrics, Enno Pala Ninaivaalum lyrics, Tamil songs
Enno Pala Ninaivaalum song lyrics in English
Enno Pala Ninaivaalum Nee Unnai Alaikalippaai
Mannargal Mannavan Aagiya Yesu Un
Mannavraai Irukkaiyilae
1.Annai Yidaththuruvaai Unnai
Amaiththa Thanthai Allavo Pinnum
Aagaaramum Udaiyum Jeevanum
Alippathavar Allavo
2.Maathaanaval Seayai oru
Vealai Maranthaalum Unnai
Maravom Orukaalum Ena
Vaarththai Koduththarae
3.Isrealarai Kappoar Urangiduvoar
Ena Ninaiyeal Avar
Nisamaaga Un Vala Paagaththil
Nilal Aavar Entrarivaai
4.Singangal Pattiniyaai Irukka
Kandean Deasam Engum
Suttri Paarththum Deva
Seayargal Pattiniyaaga Kaanean
Entra Dhivya Uraiyum
Poiyamo
5.Degamum Ketta Ulagamum Peayum
Thirandu Nianai Poruthaalum Athai
Jeyiththa Yesu Nin Mannava Raagaiyil
Sinthanai Vearenna Nianikku
6.Deva Pitha Nin Pithavum Yesu
Nin Sinekitharum Suththavi Nintran
Theattravaalanum Aavathai
Paarkkailum Devai Unakkontrum Illaiyae
Key Takeaways
- Enno Pala Ninaivaalum is a Tamil Christian song that expresses deep faith and reflection.
- The lyrics include themes of God’s guidance, Jesus’ nature, and the importance of remembrance.
- The song is structured with a pallavi, anupallavi, and multiple stanzas that explore spiritual ideas.
- It encourages listeners to maintain their connection to faith amidst life’s trials.
- The article includes English translations of the lyrics for broader accessibility.
Estimated reading time: 2 minutes


