Um Vasanam song lyrics – உம் வசனம்
Pre-Chorus
புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்
அதன் வார்த்தைகள், என்னில் பேசுமே
இதயத்தினுள், சென்று மாற்றுமே
உயிர் அணுக்களை, அவை உருக்கியே
உயர் பாதைக்கு, வழி காட்டுமே
Chorus
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே
Stanza
நான்
எனை மறக்கிறேன்
உம் வார்த்தைகள்
நினைத்து ரசிக்கிறேன்
உலகம் எழுப்பும் கேள்விக்கு
உம் வசனத்தில்
விடை காண்கிறேன்
நடந்ததும் நடப்பதும் நடக்கவிருப்பதும்
யாவுமே இதனிலே எழுதப்பட்டதே
உலகிலே மானிடர் வாழும் நாளெல்லாம்
உன்னத மேன்மைக்கு வழிகாட்டும் வசனமே
Pre-Chorus
புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்
உம் வார்த்தைகள்
தியானிக்கையில்
என் உள்ளத்தில்
மாற்றம் பார்க்கிறேன்
என் மனதினில்
உள்ள பாரங்கள்
கரைந்து போனதால்
நானும் பறக்கிறேன்
Chorus
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே


