ஆதிபிதாக் குமாரன் – Aathi pitha kumaaran Tamil christian Traditional song Lyrics
ஆதிபிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்-கு
அனவரதமும் ஸ்தோத்திரம்! – திரியேகர்க்-கு
அனவரதமும் ஸ்தோத்ரம்
அனுபல்லவி
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் – ஆதி
சரணங்கள்
1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர், கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான் பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன் பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும் பண்பாய் நடத்தி, அருள். – ஆதி.
2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதுறு நரகில் தள்ளுண்டு – மடிவாமென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன்யேசுவைக் கொண்டு
பரன் எங்கள்மிசை தயை வைத்தனர், இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த போத தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும். – ஆதி
ஆதிபிதாக் குமாரன் பாடல் வரிகள், Aathi pitha kumaaran lyrics, Aathi Pitha Kumaran song
Aathi pitha kumaaran Song Lyrics in English
Aathi pitha kumaaran – Aavi Thiriyekarkku
Anavarathamum Sthothiram – Thiriyekarkku
Anavarathamum Sthothram
Neetha Muthar porulaai Nintrarul Saruveasan
Nithamum Paninthavarkal Irudhaya malar vaasan
Nirantha saththiya Gnana manokara
uraitha niththiya vedha Gunaakara
Needu Vaari Thirai Soozha Maethiniyai
Moodu Paava Irul Oodavae Arul sei
1.Enganum Nirantha Naathar – parisuththarkal
Entraitaikkum Pani paathar
Thungaa maraipira poothar kadaisi nadu
sothanai sei Athi Neethar
Pangilaan Thaabam Illaan Pagar Adi Mudivillaan
Pan Gnanam Smbooranam parisuththam Neethi Ennum
Panpathaai Suyambu Vivekan
An pirakaatha Yaala piravaakan
Paarthalaththil Shiristippu Meetppu Pari
Paalanaithaiyum Panpaai Nadathi Arul
2.Neethiyin Sengol kaikondu Naththinaal Naam
Neenilaththillaamal Alinthu
Theethuru Naragil Thallundu Madivamentru
Deva thiruvulam unarnthu
Paathar kuyir thantha paalan yesuvai kondu
Paran Engal misai thayai vaithanar Ithu Nantru
Pagarntha thannadi yaarkkuru sanjalam
Idanjasal vantha potha thayavaagaiyil
Paaril Nearidum Angana seathamut
Sooriyan Mun Irul Polavae sitharum
Key Takeaways
- The article features the traditional Tamil Christian song ‘Aathi Pitha Kumaaran – ஆதிபிதாக் குமாரன்’ and its lyrics.
- It includes English translations of the Tamil lyrics and their meanings.
- The song praises divine attributes and seeks blessings.
- The text also provides links to other related Christian songs and their lyrics.
Estimated reading time: 2 minutes


