ஆத்தும ஆதாயம் செய்குவோமே – Aaththuma Aathaayam Seiguvomae Tamil christian Geethangalum Keethanaigalum song lyrics
பல்லவி
ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம்
அனுபல்லவி
சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்
சரணங்கள்
1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும
2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே – ஆத்தும
ஆத்தும ஆதாயம் செய்குவோமே song lyrics, Aaththuma Aathaayam Seiguvomae song lyrics, Tamil songs
Aaththuma Aathaayam Seiguvomae song lyrics in English
Aaththuma Aathaayam Seiguvomae – Ithu
Aandavarkku Piriyam Naamathinaal
Aaseervaatham Pearuvom
Saaththiram Yaavum Thearintha Kiristhaiyan
Thanjasaththai Pettru Naamintha Maa Vealaiyil
Aaththiramaaga Muyarchi Seivomaagil
Arputhanmaana Belanai Adaiyalaam
1.Paazhulaga Muluthaiyum Oruvan Sam
Paathiththu Konddalum Oru
Naalumazhiyaatha Aaththumaththai Avan
Nasatappaduththi Vittaal
Aalunthuraiyava Naayiruntaalumae
Aththaal Avanukku Laabamillai Yentru
Yealai Roobam Kondu Gnaalamathil Vantha
Empearumaan Kiristheasentru Sonnaarae
2.Keattupona Aaththumaakkalai Ratchikka
Mattillaa Devasuthan Vaanai
Vittulagil Kanapaadu Pattu Jeevan
Vittathum Vinthaithaanae
Thuttai Oruththiyi Naamaththumaththai Meetkka
Thooyaparan Munnor Kinattrarugilae
Ittamudan Seitha Ratchaniya Vealaiyai
Intha Nimishamae Sinthaiyil Enniyae
காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
ஆதியாகமம் | Genesis: 4: 24
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil song ‘Aaththuma Aathaayam Seiguvomae’ which emphasizes the importance of the soul.
- The song encourages believers to strive earnestly to achieve spiritual blessings from God.
- Lyrics discuss the futility of worldly success without a strong soul, highlighting the need for spiritual salvation.
- The song’s verses reflect on God’s grace and the potential for redemption in a spiritual context.
Estimated reading time: 2 minutes


