அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo Tamil Christmas Song Lyrics
அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத – அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத – அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத – அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத – அரசனை
அரசனைக் காணமலிருப்போமோ பாடல் வரிகள், Arasanai Kaanamaliruppomo Lyrics
Arasanai Kaanamaliruppomo Song Lyrics in English
Arasanai Kaanamaliruppomo? Namathu
Aayulai Veenaaga Kazhippomo
Paramparai Gnanaththai Pazhippomo Yuthar
Paadanu Pavangalai Ozhippomo – Yutha
1.Yaahkobilor Velli Uthikkumentrae Israel
Raaja Sengolengum Kathikkumentrae
Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam
Theerkkan Mozhi Poiyaatha Baakkiyamae – Yutha
2.Deaso Mayaththaaragai Thontruthu Paar Mearkku
Thisai Vazhi Kaatti Mun Selluthu Paar
Poosanai Kaana Nankodaikal Kondae Avar
Ponnadi Vananguvom Nadauvmintrae – Yutha
3.Alangaaramanai Ontru Thonuthu Paar Athan
Alagu Manamum Kannum Kavarnthathu Paar
Elavara Sankirkkum Nitchayam Paar Naam
Eduththa Karumam Siththiyaakidum – Yutha
4.Aramanaiyil Avarai Kaanomae Athai
Agantru Thenmaarkkmaai Thirumbuvamae
Maraintha Udu Atho Paar Thirumbinathae Bethleam
Vaasalail Namai Kondu Searkkuthu Paar – Yutha
5.Pon Thoobavarkkam Vellai Pollamittae Raayar
Porkazhal Archanai Purivomae
Van Kannan Yearothai Paaraamal Deva
Vaakkinaal thirumbinom Soraamal – Yutha
11.அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Arasanai Kaanamaliruppomo’.
- It explores themes such as spiritual reflection and the significance of the arrival of Jesus.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- Various stanzas discuss hope and the promise of salvation through Christ.
- The text invites readers to reflect on their faith during the Christmas season.
Estimated reading time: 2 minutes



