எழும்பி பிரகாசி என் மகனே – Ezhumbi Prakasi En Maganae Tamil Christian song lyrics, Written tune and sung by Josesph Aldrin.
எழும்பி பிரகாசி என் மகனே
எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி
1.நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்-2
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்-2
(இயேசு) அலங்கரிப்பாரே உன்னை -எழும்பி
2.சூரியன் வெளிச்சம் தரவில்லையோ ?
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ ?-2
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்-2
(உன்) தேவனே உனக்கு மகிமை-2 -எழும்பி
3.பூமியையும் இருள் மூடியதோ ?
ஜனங்களை காரிருள் மூடியதோ?-2
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான்-2
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்-2
எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே-2
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது-2
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2 -எழும்பி
எழும்பி பிரகாசி என் மகனே lyrics, Ezhumbi Prakasi En Maganae lyrics, Joseph Aldrin songs, tamil songs
Ezhumbi Prakasi En Maganae Song Lyrics In English
Ezhumbi Prakasi En Maganae
Ezhumbi Prakasi En Magalae
Un Ozhi Vanthathu Magimai Uthiththathu
Magimai Un Mael Uthiththathu ( Avar)
1.Neagilappattaai Nee Kaividapattaai
Oruvarum Kadanthu Nadavaathathaai
Niththiya Maatchiyaai Thalaimurai Magilchiyaai
Alangaruppaarae Unnai Eazhumbi ( Yesu)
2.Sooruya Velicham Tharavillaiyo
Un Santhiran Velicham Tharavillaiyo
Karththarae Unakku NIththiya Velicham
Devanae Unakku Magimai (Un)
3.Boomiyaiyum Irul Moodiyatho
Janangalai Kaarirul Moodiyatho
Magimai Un Mael Velichamae Nee Thaan
Boomikkae Velicham Nee Thaan ( Intha)
Ezhumbi Pirakaai Ethirkaalamae ( En)
Un Ozhi Vanthathu Magimai Uthiththathu
Magimai Un Mael Uthiththathu ( Avar)
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எழும்பி பிரகாசி என் மகனே – Ezhumbi Prakasi En Maganae’.
- The song celebrates themes of light and glory, emphasizing divine presence and joy.
- It includes multiple verses that express hope and illumination through faith.
Estimated reading time: 2 minutes
ஏசாயா 60
1.எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
15.நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
20.உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
2.இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.



