தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum Tamil Christian song lyrics and sung by Krishnaraj. Thagam Album songs
தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும்
அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2
உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2
என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே
தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2
1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால்
மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ…
வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால்
வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே
நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் தெய்வம் வரும்
சாதியை நாம் ஒழித்தால் சமத்துவத்தென்றல் வரும்
ஒருமுறை தான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்
2. தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்
வானம் என்னும் கூரையின் கீழ் வறுமையும் ஏனோ ஆ…
சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கிறோம்
வன்முறையால் நாட்டின் அமைதி குலைக்கிறோம்
மதவெறி நாம் மறப்போம் மனிதனை நாம் நினைப்போம்
உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்
உலகமெங்கும் பிரிவினையின் சுவர்களுடைப்போம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அரசு வரும் இறைவன் அரசு வரும்
தரிசனம் நீ தரவேண்டும் பாடல் வரிகள், Tharisanam Nee Tharavendum lyrics
Tharisanam Nee Tharavendum song lyrics in English
Tharisanam Nee Tharavendum Yesu Deivamae Entrum
Anbu seithu Ullam vaalum Amaithiyilae-2
Ulagam Oru Samaneethi Kudumbamagavae-2
En Illam Engum Iraivan Vaalum Koyilagavae
Tharisanam Thaa Unthan Tharisanam Thaa-2
1.Madi Niraiya Porulilirunthum Manam Niraiya Pagaiyirunthaal
Manathil Entru Amaithi varum nanbanae Aa..
Vazhikaliylae Oliyirunthum Vizhikalailae Irulirunthaal
Vaalvil Entru Niraivu Varum Anbanae
Neethiyil Naam Vaalnthaal Veethiyil Deivam varum
Saathiyai Naam Olithaal Samathuvathentral Varum
Orumurai Thaan Pookkum Vaalvil Manam Parappuvom
Nanavaagum Nam Kanavugal Nijamagum
Amaithi Varum Nenjil Amaithi Varum
2.Tharmangalum Niyayangalum Anaivarukkum Samamanaal
Vaanam Ennum Kooraiyil Keezh Varumaiyum Yeano Aa
Suyanalaththil Ayalavarin Suthanthirathai Marukkirom
Vanmuraiyaal Naattin Amaithi Kulaikkirom
Matha Veri Naam Marappom Manithanai Naam Ninaippom
Uyirkalai Naam mathippom Uravugal Thinam Valarppom
Ulagamengum piriviniyin Suvarkaludaippom
Nanavaagum Nam Kanavugal Nijamagum
Arasu Varum Iraivan Arasu Varum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum’, sung by Krishnaraj.
- Lyrics emphasize themes of peace, equality, and divine presence in homes.
- The song conveys a message of unity and the importance of spiritual harmony in life.


