புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum Tamil Christian song lyrics
வெண்பா
புத்திக்கெட்டாத பொருளும் அறிவுமுள்ள
யுத்தி மிகுந்த நுவலரிய-சுத்திதரு
அய்யனே! மாந்தர்க்களித்த அருள்வேதம்
துய்யவின்ப போதநிறை சொல்.
பல்லவி
அய்யனே! உன்வேதம் இன்பமே -அய்யனே!
அனுபல்லவி
அதனை மறுத்துமீறில் அதிகம் வருகும் துன்பமே; -அய்யனே
சரணங்கள்
1.தேன்கூண்டொழுகு தேனில் மிக்கதே, -சுத்த
தெளிந்த நறுந்தேனில் தக்கதே; உண்ணத்
தித்திப்பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட -அய்யனே
2.பேதையை அறிவாக்கும் சத்தியம், -ஆவி
பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்; -நன்மை ,
பெருக்கங்கொண்ட நீதி உருக்கங்கொண்டசோதி -அய்யனே
3.பொன்னிலும் உயர்ந்த பொன்னாகுமே,-மாள்ளில்
புடமிட்டபசும்பொன்னென்நூலாகுமே -கடை
புகுந்தவழிக்குத் தீபம் தகுந்த அருளிலாபம் -அய்யனே
4.ஆவியின் பட்டயம் ஆகுமே -நித்திய
அருள் மோட்சத்தில் கொண்டுபோகுமே; உன்றன்
அரிய மகிமைகாட்டும், பெரிய கவலை ஓட்டும் -அய்யனே
5.சுத்த நடக்கைதரும் சுத்தமே, -மிக
துய்ய அறிவு தரும் வித்தமே, -இனிமை
சொல்லத் தொலைந்திடாத, வல்லத்தகை அதீத -அய்யனே
Puththikettatha Porulum song lyrics in english
Puththikettatha Porulum Arivumulla
Yuththi Miguntha Nuvalariya Suththitharu
Aiyanae Maantharkaliththa Arulvedham
Thuiyavinba Potha Nirai Sol
Aiyanae Un Vedham Inbamae Aiyanae
Athanai Maruthu Meeril Athigam Varugum Thunbamae Aiyanae
1.Thean Koodologu Theanil Mikkathae Suththa
Thelintha Naruntheanil Thakkathae Unnatha
Aththipathigam Konda Suththa Thagaimaivinda -Aiyanae
2.Peathaiyai Arivaakkum Saththiyam Aavi
Peruga Uyirpikkum Niththiyam Nanma
Perukkam Konda Neethi Urukkam Konda Sothi -Aiyanae
3.Ponnilum Uyarntha Ponnagumae Maallil
Pudamitta Pasum Ponnean Noolagumae Kadai
Puguntha Vazhikku Deepam Thaguntha Arulilaabam -Aiyanae
4.Aaviyin Pattayame Aagumae Niththiya
Arul Motchaththil kondu Pogumae Untran
Ariya Magimai Kaattum Periya Kavalai Oottum -Aiyanae
5.Suththa Nadakkaitharum Suththamae Miga
Thuiya Arivu Tharum Viththame Inimai
Solla Tholainthidatha Vallathagai Atheetha -Aiyanae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song titled ‘புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum’.
- The song includes various verses praising divine wisdom and seeking guidance.
- Each verse emphasizes themes of purity, truth, and eternal life through the Lord’s grace.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- The focus is on the transformative power of the divine as expressed in the song.


